Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாலிபரை அடித்துக் கொன்றதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

February 23, 2018
in News, Politics, World
0

கேரளமாநிலத்தில் பாலக்காடு அருகே கடுகுமன்னா பகுதியில் உணவை திருடிவிட்டான் என்று குற்றம்சாட்டி 27 வயது பழங்குடி வகுப்பைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை அப்பகுதியில் சிலர் அடித்தே கொன்ற சம்பவம் சமூக வலைத்தளங்கள் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட வாலிபர் பெயர் ஏ.மது, கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த வியாழன் மாலை 6.30 மணியளவில் மது என்ற அந்த இளைஞனை கண்முடித்தனமாக கம்புகளால் அடித்து உடலில் பல காயங்களுடன் அகாலி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் இவரை கொட்டாதராவில் உள்ள பழங்குடி சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஜீப்பில் ஏற்றியுள்ளனர், ஆனால் ஜீப்பிலேயே மயங்கி விழுந்த அவர் இறந்தே போனார் என தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் மக்கள் இவரை அருகில் உள்ள காட்டில் மாலை 4 மணிக்குப் பிடித்தனர். 3 நாட்களுக்கு முன்பாக கிராமத்தில் ஒருவர் வீட்டிலிருந்து பொருட்களைத் திருடிச் சென்றதாக இவரைக் குற்றம்சாட்டி கண்முடித்தனமாக தாக்கியுள்ளனர். இதனால் மது என்ற வாலிபர் மரணமடைந்ததையடுத்து இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மதுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மது மனநிலை சரியில்லாதவர் என்றும் எப்போதாவது காட்டில் அவர் வசிப்பதுண்டு என்று அகாலி உதவி எஸ்.பி. என்.சுப்பிரமணியன் தெரிவித்தார். மதுவுக்கு அவரது குடும்பத்தினருடன் தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவலாக கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜாய் மேத்யூ, பழங்குடி நல சமூக ஆர்வலர் சி.கே.ஜானு ஆகியோர் இந்த கொலைக்குக் காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் கேரளா அகாலி போலீஸார் 15 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பத்தை அறிந்த கேரளா இடதுமுன்னணியின் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயன் இந்த சம்பவத்துக்குக் கண்டனம் வெளியிட்டு சம்பந்தப்பட்டோர் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அதனையடுத்து அவர் தன் முகநூல் பக்கத்தில், “நாகரீக சமூகத்தில் இத்தகைய கொடுஞ்செயல்களை அனுமதிக்க முடியாது. கேரள மாநிலத்துக்கு இழுக்கு சேர்த்துள்ளது இந்தச் சம்பவம்” என்று கூறியுள்ளார்.

Previous Post

இளம்பெண் தீ வைத்து கொலை

Next Post

ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது, கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம்

Next Post

ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது, கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures