Thursday, August 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Gallery

“நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள் காம்ரேட்”.. ஃபிடல் காஸ்ட்ரோ நினைவுதின பகிர்வு

November 25, 2017
in Gallery, Life, News, World
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒருபக்கம் மக்கள் அவரை ஆராதனை செய்தார்கள். ‘நேர்வழியில் எங்களை முன்னேற்றிய தலைவன்’ என்று கொண்டாடினார்கள். மறுபுறம் அவர்மீது எண்ணற்றக் குற்றச்சாட்டுகள். மனித உரிமை மீறல் புகார்கள், எண்ணற்ற கொலைமுயற்சிகள், ‘ஒரு சர்வாதிகாரிபோல செயல்பட்டார்’ என்று விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும், ஃபிடல் காஸ்ட்ரோ காலத்தால் நினைவுகூரப்பட வேண்டியவர். ஏன்…?

ஃபிடலின் வரலாறு என்பது, ஒரு தனிமனிதனின் வரலாறாக மட்டுமல்லாமல், அவர் வாழ்ந்த காலமானது, வரலாற்றின் முக்கியமான பல நிகழ்வுகள் ஒன்றுகுவியும் பகுதியில்தான் அமைந்துள்ளது. பெரும்பாலும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிராகவும் புரட்சி செய்தவராகப் பார்க்கப்படும் ஃபிடலின் தந்தை ஒரு நிலவுடைமையாளர். சிறுவயதில் சுட்டித்தனங்கள் செய்யும் சிறுவனாக, பாடங்களில் விருப்பம் இல்லாத சிறுவனாக இருந்த அவரின் வாழ்க்கை, கல்லூரிப்பருவத்தில் அவர் படித்த பொதுவுடைமைக் கொள்கைமூலம் அப்படியே மாறியது. சட்டம், வரலாறு, தத்துவவியல் ஆகியவற்றை மிகுந்த விருப்போடு கற்ற அவருக்கு, அவர் கற்ற கல்வி சுரண்டலுக்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தூண்டியது. இளமைக்காலத்தில் ஃபிடல் மிகச்சிறந்த பேச்சாளராக, அமெரிக்காவிற்கு எதிராகவும், அமெரிக்காவின் கைப்பாவையாக விளங்கிய ஆட்சியர் பாடிஸ்டாவிற்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தொடங்கினார். அப்படி விழுந்த விதைதான் அவரை ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற பத்திரிகையை நடத்தவும் உந்தித் தள்ளியது.

தன் முதல் தாக்குதலை நடத்தும்போது காஸ்ட்ரோவிற்கு இருபத்து ஏழு வயது. பல்வேறு சூழ்நிலைக் காரணங்களால் அத்தாக்குதல் தோல்வி அடைந்தது. காஸ்ட்ரோ, நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆயினும், நீதியை மட்டுமே உயர்த்திப் பிடித்து, பாடிஸ்டா அரசின் தோல்விகளைத் தோலுரித்துக் காட்டினார். பின்பு 1955-ம் ஆண்டு அவர் விடுவிக்கப்படுகின்றார். பின்பு மெக்சிகோவில் தன்னைப்போலவே சக போராளியான சேகுவேராவைச் சந்திக்கின்றார். இருவருக்கும் கனவுகள் ஒன்றுபோலவே மலருகின்றன. சிறிது சிறிதாக இளைஞர்களையும், கியூபா நாட்டு விவசாயிகளையும் ஒன்று திரட்டி, புரட்சிக்குத் தயார் செய்கின்றார்.

பாடிஸ்டாவின் அரசிற்குப் பிறகு, காஸ்ட்ரோ தலைமை ஏற்கிறார். 1959 முதல் 1976-ம் ஆண்டு வரை கியூபா நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார். பின்பு அதே நாட்டின் தலைவராக 1976 முதல் 2008 வரை பதவி வகித்தார். இவ்வகையில், நீண்டகாலம் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களுக்கு மத்தியில், ஃபிடல் காஸ்ட்ரோவிற்கும் தனி ஒரு இடம் உண்டு.

உலகின் பெரியண்ணனான அமெரிக்காவில் இருந்து கியூபா வெறும் 96 மைல்கல் தொலைவுதான். என்றாலும், என்றுமே அது அமெரிக்காவைப் பார்த்து பயந்ததில்லை என்பதற்கு அவரின் ஆட்சியும், கொள்கை முறைகளும் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. பொருளாதாரத் தடை விதிப்பு, எண்ணற்ற கொலை முயற்சிகள் என்று காஸ்ட்ரோ சந்தித்த சவால்கள் பல இருந்தாலும், ஒரு ஆட்சியாளராகக் காஸ்ட்ரோ செய்த பல சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமலேயே உள்ளது. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்று அழைக்கப்படும் கியூபாவின் எழுத்தறிவு விகிதம் இன்று பல வளர்ந்த நாடுகளைவிட அதிகம். அதற்கு அடித்தளம் இட்டது அவருடைய எழுத்தறிவு இயக்கம்தான். குழந்தைகள், முதியவர்கள், தொழிலாளிகள், பெண்கள் என்று எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வி அளித்தது கியூபா அரசு. “தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள். தெரிந்தவர்கள் கற்றுக்கொடுங்கள்” என்பதே ஃபிடல் காஸ்ட்ரோவின் தாரக மந்திரம் ஆகும்.

1990-களில் நடந்த யுனெஸ்கோ ஆய்வு அறிக்கையின்படி, கியூபாவின் கல்வி அறிவு விழுக்காடு 96 ஆகும். அவர்கள் நாட்டில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவதில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் பெண்கள். மருத்துவத் துறையிலும் மகத்தான சாதனைகள் புரிந்த நாடாக இன்றும் உலகிற்கு முன்னோடியாகத் திகழ்வது கியூபாதான். மேலும், தாய்-சேய் இறப்பு விகிதமும் மிக மிகக்குறைவாக இருந்த நாடாகவும் இருந்தது. ஆயிரம்தான் இருந்தும் ஆட்சியின்மீது விமர்சனங்கள் இல்லாமல் இருக்குமா என்ன? இவரது ஆட்சியின்போதுதான் எண்ணற்ற கியூபர்கள் புலம்பெயர்ந்தார்கள். நாட்டில் ஒற்றை ஆட்சிமுறைதான் அமலில் இருந்தது. கருத்துச் சுதந்திரம் என்பது அங்குள்ள குடிமகனுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. நிரூபணங்கள் இல்லாவிடிலும், கியூபாவில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அவர் நம்மை விட்டுப்பிரிந்து இன்றோடு ஓராண்டு முடிகின்றது. நீங்கள் நினைவு கூரப்படுவீர்கள், ஃபிடல். ஏனெனில், உங்கள் நாட்டினைப் போல் அல்லாமல், இன்றும் எங்கள் குழந்தைகளை நாங்கள் பிராணவாயு இல்லாமலும், டெங்குக் காய்ச்சலாலும் இழந்து கொண்டிருக்கின்றோம்!

Previous Post

வடகொரியா வெளியிட்ட பட்டியல்: பீதியில் உலக நாடுகள்!!

Next Post

வீதியில் சென்ற பெண்ணிற்கு நடந்த பயங்கரம்! யாழில் சம்பவம்

Next Post
Easy24News

வீதியில் சென்ற பெண்ணிற்கு நடந்த பயங்கரம்! யாழில் சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

திராய்க்கேணி படுகொலை ; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை – கண்ணீருடன் மக்கள்

திராய்க்கேணி படுகொலை ; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை – கண்ணீருடன் மக்கள்

August 7, 2025
ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

August 7, 2025
குமணன்மீது விசாரணை | திருமுருகன்காந்தி கண்டனம்

குமணன்மீது விசாரணை | திருமுருகன்காந்தி கண்டனம்

August 7, 2025
இந்திய வெளியுறவுச்செயலரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்திய முக்கிய விடயம்

ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து கஜேந்திரகுமார் கேள்வி

August 7, 2025

Recent News

திராய்க்கேணி படுகொலை ; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை – கண்ணீருடன் மக்கள்

திராய்க்கேணி படுகொலை ; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை – கண்ணீருடன் மக்கள்

August 7, 2025
ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

August 7, 2025
குமணன்மீது விசாரணை | திருமுருகன்காந்தி கண்டனம்

குமணன்மீது விசாரணை | திருமுருகன்காந்தி கண்டனம்

August 7, 2025
இந்திய வெளியுறவுச்செயலரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்திய முக்கிய விடயம்

ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து கஜேந்திரகுமார் கேள்வி

August 7, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures