Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு! இந்திய கடலோரப் படை மீண்டும் விளக்கம்

November 22, 2017
in News, Politics, World
0

ராமேஸ்வரம் மீனவர்கள்மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டு இந்தியக் கடலோரக் காவல்படையில் பயன்படுத்தக்கூடியதுதான் என மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் தெரிவித்ததாக நேற்று செய்திகள் வெளியானது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து இந்தியக் கடலோரக் காவல்படை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 13-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக மீனவர்கள் புகார் கூறியிருந்தனர். மீனவர்களது படகில் சிதறிக் கிடந்த துப்பாக்கிக் குண்டு ஒன்றையும் கண்டெடுத்துவந்தனர். மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட குண்டு இந்தியக் கடற்படையில் பயன்படுத்துவது இல்லை என மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

நேற்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தங்கச்சிமடத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க வந்திருந்த மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மீனவர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம்குறித்து எனக்கு ஏதும் தெரியாது. ஏனெனில், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தது சென்னைக் கடலோரக் காவல் படை நிலையத்திலிருந்து வந்த கப்பலாகும். ஆனால், மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட 0.22 மி.மி அளவுகொண்ட துப்பாக்கிக் குண்டு இந்தியக் கடலோரக் காவல்படையில் பயன்படுத்தக்கூடியதுதான்’ என்று பேசினார். இதுகுறித்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கமாண்டர் பேசியது வேறு, ஆனால் செய்தியாக்கப்பட்டது வேறு என்று கடலோரக் காவல் படை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

கடலோரக் காவல்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் ‘மீனவர்கள்மீது கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏதும் நடத்தவில்லை என்று முன்னரே தெளிவாக சொல்லிவிட்டோம். ஆனால், ஊடகங்கள் பாதுகாப்பு அமைச்சர்மீது அவதூறு பரப்பும் நோக்கில் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றன. இதற்கு கடலோரக் காவல்படை கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்கிறது” என்று குறிப்பிட்டு ஊடகச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

”கமாண்டர் ராமாராவ்வின் நேரடி பேட்டியை தான் செய்தியாக்கினோம். அவர் பேசியதைதான் பதிவு செய்தோம்” என்று செய்தியாளர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.

Previous Post

ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றியது என்ன? வருமானவரி அதிகாரி விளக்கம்

Next Post

500, 1,000 ரூபாய் நோட்டுகளைப்போல காசோலைகளுக்குத் தடை..!

Next Post
500, 1,000 ரூபாய் நோட்டுகளைப்போல காசோலைகளுக்குத் தடை..!

500, 1,000 ரூபாய் நோட்டுகளைப்போல காசோலைகளுக்குத் தடை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures