வீதியோரங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரான்ஸ் தலைநகரான பரிஸில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.
பரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய 3 வர்ணங்களைக் கொண்ட பட்டிகளை அணிந்திருந்ததுடன், தேசியகீதத்தை இசைத்தவண்ணம்; சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக, வீதியோரங்களில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
பொதுவிடங்களில் பிரார்த்தனையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென, விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, பிரான்ஸில் சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.