Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தினகரன் அதிரடி பேட்டி

June 21, 2017
in News
0

கட்சி பணி மற்றும் கட்சி நிகழ்வுகளில் இருந்து அமைச்சர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தினகரன், பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றியும் புகார் அளித்துள்ளார்.

60 நாட்கள் சசிகலா பொறுமையாக இருக்கச் சொல்லி இருக்கிறார். அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தினகரன் தெரிவித்தார். இதன் பின்னர் சென்னையில் தனது ஆதரவாளர்களை திரட்டி ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் தனது அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் பற்றியும், தன்னை ஒதுக்கி வைத்திருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்து வருவது பற்றியும் ஆவேசமாக பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில்,

கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் அவரால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எனக்கே அத்தனை அதிகாரமும் உள்ளது. என்னை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

அமைச்சர்கள் சிலர் அதுபோன்று கூறி வருகிறார்கள். இது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. இந்த அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார்? என்பதை அவர்களிடமே போய் கேளுங்கள்.

என்னை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக கூறும் அமைச்சர்களை நீக்கும் அதிகாரமும் துணைப் பொதுச் செயலாளர் என்கிற முறையில் என்னிடமே இருக்கிறது.

இதனை பயன்படுத்தி அமைச்சர்கள் உள்ளிட்ட யாரையும் என்னால் நீக்க முடியும். இதனை அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு எப்போது செல்வீர்கள் என்று எல்லோருமே என்னிடம் கேட்கிறார்கள். பத்திரிகையாளர் சந்திப்பிலும் இந்த கேள்வி என்னிடம் அதிகம் கேட்கப்படுகிறது. அதற்கான காலம் வரும். அப்போது கட்சி அலுவலகத்துக்கு நான் நிச்சயமாக செல்வேன். 60 நாட்கள் கழித்து அரசியல் பணிகளில் நிச்சயமாக தீவிரம் காட்டுவேன். என்னைப் பொறுத்தவரையில் நான் எதற்கும் பயப்படாதவன்.

என் மீது எந்த தவறும் இல்லை. எனவே ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த வழக்காக இருந்தாலும் சரி, எந்த வழக்காக இருந்தாலும் சரி அதனை துணிச்சலுடன் எதிர்கொள்வேன் என பேட்டி அளித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

எரிவாயு கடையில் பாரிய தீ விபத்து – வெடித்து சிதறும் சிலிண்டர்களால் ஆபத்து

Next Post

லண்டன் தீ விபத்து: 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சி செயல்

Next Post
லண்டன் தீ விபத்து: 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சி செயல்

லண்டன் தீ விபத்து: 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சி செயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures