U.S.-கனடா புலன்விசாரனையின் பின் 10மில்லியன் டொலர்கள் அடையாள திருட்டு வளையம் முறியடிக்கப்பட்டது.

ரொறொன்ரோ- கனடா மற்றும் வெளிநாடுகளில் இடம்பெற்ற 10-மில்லியன் டொலர்கள் திருட்டில் சம்பந்தப்பட்ட திருட்டு வளையம் ஒன்றை பொலிசார் முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரொறொன்ரோ பொலிசார், ஆர்சிஎம்பி, பல மாகாண அமைச்சுக்கள் மற்றும் U.S.. முகவர்கள் இணைந்து செயல்படுத்திய றோயல் திட்டம் என பெயர் கொண்ட திட்டம் இம்முறியடிப்பில் பங்கு கொண்டன.
இருவர் கைது செய்யப்பட்டதாகவும் மற்றய இருவருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் ஆடம்பரமாக வாழ்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
300,000 டொலர்கள் பெறுமதியான ஆடம்பர கைக்கடிகாரங்கள், நகைகள் மற்றும் கிட்டத்தட்ட 90சோடிகள் சப்பாத்துக்கள் போன்றனவற்றை பொலிசார் பறிமுதல் செய்யதுள்ளனர்.
ரொறொன்ரோவை சேர்ந்த 45-வயது அடிடாயோ ஒகுன்டானா  மீது பல மோசடி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அடெகுநெல் ஒமிட்ரிரான் 37 வயது என்பவர் மீது மோசடி, அடையாள திருட்டு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
44-வயதுடைய டுரோ அகின்ரோலா மற்றும் ரொறொன்ரோவை சேர்ந்த இமானுவேல் சலாகோ 47-வயது இருவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய மாநிலங்களை சேர்ந்த கீ சாக் என்பவர் தேடப்படும் நபர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

theft2theft5theft4theft3

theft1

theft

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *