இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், தினகரனிடம் 7 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர், மீண்டும் நாளை) பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராகுமாறு டெல்லி குற்றப்பிரிவு பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெற டில்லியில் தரகர் மூலம் தேர்தல் கமிஷனுக்கு ரூ. 60 கோடி வழங்குவதாக பேரம் பேசிய வழக்கில் தினகரன் டெல்லி குற்றப்பிரிவு பொலிசார் முன்பு ஆஜரானார்.
இன்று பிற்பகல் துவங்கிய விசாரணை இரவு 10 .15மணி வரை நடந்தது. சுகேஷ் சந்திரனை வைத்து டெல்லி குற்றப்பிரிவு பொலிசார் விசாரணை நடத்தினர்.
தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் விசாரணையைமுடித்தது. தினகரன் செல்போன் அழைப்புகளை பொலிசார்ஆய்வு செய்தனர்.
விசாரணையின் முடிவில் தினகரனை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் ஆஜாராகுமாறு டெல்லி குற்றப்பிரிவு பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்.