மொன்றியல் பகுதியில் ஒரே குடும்பத்தில் மூவர் பரிதாப மரணம்

மொன்றியல் தெற்கு பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றின் நீட்டத்தில் கார் ஒன்று தவறான பாதையில் பயணித்ததால் எஸ்யுவி ஒன்றுடன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மற்றும் வேறொரு பெண் உட்பட நால்வரும் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் செவ்வாய்கிழமை காலை நடந்துள்ளது.

80-வயதுடைய மனிதர் எதிர்வந்த போக்குவரத்து பாதையில் தனது வாகனத்தை செலுத்திவந்ததால் நெடுஞ்சாலை 30 மொன்றியல் தெற்கிற்கு அருகில் எஸ்யுவி ஒன்றுடன் மோதியுள்ளதாக கியுபெக் மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தவறான பாதையில் வந்த வாகனத்தின் சாரதி 81-வயதுடைய பெண் ஒருவர் மற்றும் 15-வயதுடைய பையன் ஒருவன் மூவரும் கொல்லப்பட்டனர். மூவரும் ஒரே குடும்பத்தினராவர். இவர்கள் ஒன்ராறியோவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மற்றய வாகனத்தின் முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த 56-வயதுடைய பெண் வைத்தியசாலையில் இறந்து விட்டார்.

wayway1way2way3way4

976 total views, 663 views today

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News