Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்துவது எப்படி? அட்டவணை தயாரிக்கும் கூட்டமைப்பு

April 8, 2017
in News
0
ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்துவது எப்படி? அட்டவணை தயாரிக்கும் கூட்டமைப்பு

இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தில், ஐ.நா. தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கால அட்டவணையைத் தயாரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இந்நிலையில் இக் கூட்டத்தில் பேசப்பட்ட விடையங்கள் குறித்து அக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு கருத்துரைத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மூன்று விடயங்கள் ஆராயப்பட்டன. அரசமைப்பு விவகாரத்தில் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பில் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த 2 வருடங்கள் இலங்கைக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலப் பகுதியில் தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் கால அட்டவணையை கூட்டமைப்பு தயாரிக்கவுள்ளது. இதனை இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

வடக்கில் காணி விடுவிப்புக்கான தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. எமது உறுப்பினர்களை, காணி விடுவிப்பு தொடர்பான விவரங்களை மூன்று நாட்களில் திரட்டச் சொல்லியுள்ளோம்.

அது கிடைக்கப்பெற்றதும் அரசுக்குக் கடிதம் அனுப்பவுள்ளோம். அத்துடன் ஜனாதிபதியையும், பிரதமரையும் நேரில் சந்தித்துப் பேசவும் முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

ஜனாதிபதி தமிழ், முஸ்ஸிம் மக்களை ஒதுக்கி விட்டார்! அனந்தி சசிதரன் ஆதங்கம்

Next Post

உலக நாயகனை மிஞ்சிய வீரவன்ச! அம்புலன்ஸிற்குள் அம்பலமான நாடகம்!!

Next Post
உலக நாயகனை மிஞ்சிய வீரவன்ச! அம்புலன்ஸிற்குள் அம்பலமான நாடகம்!!

உலக நாயகனை மிஞ்சிய வீரவன்ச! அம்புலன்ஸிற்குள் அம்பலமான நாடகம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures