Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சம்பந்தனுக்கு உறுதி மொழி கொடுத்த இராணுவத்தளபதி!

April 4, 2017
in News
0
சம்பந்தனுக்கு உறுதி மொழி கொடுத்த இராணுவத்தளபதி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் நிச்சயமாக விடுவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

கேப்பாப்புலவில் உள்ள 468 ஏக்கர் காணியை இராணுவத்தினர் கைப்பற்றி வைத்துள்ளனர். இராணுவத் தலைமையகமும் அதில் அமைந்துள்ளது. இந்தக் காணியை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இரவு, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்தநிலையில், மூன்று நாட்களின் பின்னர் அதாவது கடந்த வியாழக்கிழமை, இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வாவுடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பேச்சு நடத்தியுள்ளார். கேப்பாப்புலவுக் காணி விடுவிப்புத் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் வினவப்பட்டது.

அதற்கு இராணுவத் தளபதி, அந்தக் காணிகளை நிச்சயம் விடுவிப்போம் என்று பதிலளித்துள்ளார். அங்கு அமைந்துள்ள இராணுவ முகாமை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அது முடிவடைந்ததுமே அந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் இராணுவத் தளபதி உறுதியளித்துள்ளார் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

கிளிநொச்சி மாணவியை அருகில் அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதி

Next Post

இலங்கைக்கு ஜி.எஸ்.பிளஸ் கிடைக்குமா? மே 15இல் வெளிவரும் இறுதித் தீர்மானம்!

Next Post
இலங்கைக்கு ஜி.எஸ்.பிளஸ் கிடைக்குமா? மே 15இல் வெளிவரும் இறுதித் தீர்மானம்!

இலங்கைக்கு ஜி.எஸ்.பிளஸ் கிடைக்குமா? மே 15இல் வெளிவரும் இறுதித் தீர்மானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures