Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பணத்திற்காக நாடகமாடிய பெற்றோர்: 14 ஆண்டுகள் சிறை தண்டனை?

March 15, 2017
in News
0
பணத்திற்காக நாடகமாடிய பெற்றோர்: 14 ஆண்டுகள் சிறை தண்டனை?

பணத்திற்காக நாடகமாடிய பெற்றோர்: 14 ஆண்டுகள் சிறை தண்டனை?

பிரான்ஸ் நாட்டில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதாக நாடகமாடிய பெற்றோர் இருவருக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத்தாக்குதலில் 130 பேர் பலியாகினர்.

சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பிரான்ஸ் அரசு நிதியுதவி வழங்கியது.

ஆனால், இந்த பணத்தை பெறுவதற்காக ‘தாக்குதலில் தாங்கள் இருவரும் பாதிக்கப்பட்டதாக’ கூறி பெற்றோர் இருவர் நாடகமாடியுள்ளனர்.

மேலும், இருவருக்கும் அரசு 60,000 யூரோ பணம் வழங்கியுள்ளது.

இந்த பணத்தை இருவரும் மிகவும் ஆடம்பரமாக செலவு செய்தபோது இருவரின் நாடகம் வெளியே கசிய தொடங்கியது.

பின்னர், இருவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் கணவருக்கு 6 ஆண்டுகள் மற்றும் மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது.

எனினும், இத்தீர்ப்பினை எதிர்த்து இருவரும் மேல் முறையீடு செய்தனர்.

இதுமட்டுமில்லாமல், கடந்தாண்டு யூலை மாதம் நைஸ் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாங்கள் இருவரும் பாதிக்கப்பட்டதாக மீண்டும் நாடகமாடியுள்ளனர்.

இரண்டாவது முறையும் பெற்றோர் நடத்தியது நாடகம் என்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இருவருக்கும் 30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

எதிர்வரும் ஏப்ரல் 19-ம் திகதி இருவருக்கும் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: Featured
Previous Post

தமிழகத்தின் புதிய ஆளுநர் எஸ்.எம்.கிருஷ்ணா?

Next Post

அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: ஆயிரக்கணக்கில் விமான சேவைகள் பாதிப்பு..! அச்சத்தில் மக்கள்

Next Post
அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: ஆயிரக்கணக்கில் விமான சேவைகள் பாதிப்பு..! அச்சத்தில் மக்கள்

அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: ஆயிரக்கணக்கில் விமான சேவைகள் பாதிப்பு..! அச்சத்தில் மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures