Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்த தயாராகும் இலங்கை பெண்

February 27, 2017
in News
0
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்த தயாராகும் இலங்கை பெண்

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்த தயாராகும் இலங்கை பெண்

பிரித்தானியாவில் 8 வருடங்களாக வாழ்ந்த ஈழப் பெண் சிரோமினி சற்குணராஜா நாடு கடத்தப்படவுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரோமினி கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாளை மறுதினம் அவர் நாடு கடத்தப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஈழப் பெண் இந்த வருடம் தன் மின் பொறியியல் பட்டப் படிப்பினை நிறைவு செய்யவுள்ளார்.

2009 ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்ற சிரோமினி அவரது தந்தையின் மாணவர் விசாவை வைத்தே தங்கியுள்ளார். இருப்பினும் குறித்த யுவதியின் தந்தை 2011 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.

பின்னர் சிரோமினியின் இரண்டாம் நிலை கல்வி நிறைவடைந்து பல்கலைக்கழக பட்டப் படிப்பு தொடங்கிய வேளையில் அவரது தாயாரையும் அவரும் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் 21ம் திகதி அந்த பெண்ணின் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பம் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு உள்துறை செயலாளர் ஒருவருக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 28 ஆம் திகதி நாடு கடத்துவதற்கு எதிராக தனக்கு ஆதரவு அளிக்குமாறு குறித்த பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது நாடு கடத்தலை நிறுத்துமாறு அங்குள்ள 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தனது மகளின் பட்டப்படிப்பு இடையிலேயே நின்று விடுமோ என சிரோமினியின் தாய் கவலை வெளியிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இன்று ஆரம்பம்!

Next Post

ஈழ மக்களுக்கு ஆதரவாக லண்டனில் வெடித்தது போராட்டம்… ஆயிரக்கணக்காணவர்கள் பங்கேற்பு

Next Post
ஈழ மக்களுக்கு ஆதரவாக லண்டனில் வெடித்தது போராட்டம்… ஆயிரக்கணக்காணவர்கள் பங்கேற்பு

ஈழ மக்களுக்கு ஆதரவாக லண்டனில் வெடித்தது போராட்டம்... ஆயிரக்கணக்காணவர்கள் பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures