Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் மறுப்பு! அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரி கவலை

February 26, 2017
in News
0
இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் மறுப்பு! அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரி கவலை

இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் மறுப்பு! அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரி கவலை

தனது உயிரை காப்பாற்றுவதற்காக பாரிய அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட இலங்கையர்களின் நிலை குறித்து கவலை அடைவதாக அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டன் தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கை தம்பதிக்கு ஹொங்கொங்கில் அரசியல் பாதுகாப்பு வழங்கப்படாமை “விபரிக்க முடியாத சோகம்” என ஸ்னோவ்டன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ரஷ்யாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஸ்னோவ்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து தப்பி சென்று தற்காலிகமாக ஹொங்கொங்கில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில், அரசியல் தஞ்சம் கோரியிருந்த இலங்கையர்கள் ஸ்னோவ்டனுக்கு இரகசிய பாதுகாப்பு வழங்கியிருந்தனர். இந்த சம்பவம் கடந்த 2013 ஜுன் மாதம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் இலங்கை பொலிஸ் குற்ற விசாரணை திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் சிலர் கடந்த டிசம்பர் ஹொங்கொங்கிற்கு சென்று குறித்த இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் ஹொங்கொங்கில் வசிக்கும் இலங்கையர்களிடம் தகவல் கோரியுள்ளதாக இலங்கையர்களின் சட்டத்தரணி ரொபட் டிப்போ தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தகவல் முற்றிலும் போலியானதென தெரிவித்த இலங்கை பொலிஸார் அந்த குற்றச்சாட்டை நிராகரித்திருந்னர்..

அமெரிக்காவின் மிகப் பெரிய புலனாய்வு நடவடிக்கைகளை உலகத்திற்கு அம்பலப்படுத்திய முன்னாள் புலனாய்வு அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டனை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்னோவ்டன் ரஷ்யாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி: இரு சத்திர சிகிச்சை

Next Post

முதலமைச்சர் எடப்பாடிக்கு வந்த சோதனை! பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்ட அதே சிக்கல்

Next Post
முதலமைச்சர் எடப்பாடிக்கு வந்த சோதனை! பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்ட அதே சிக்கல்

முதலமைச்சர் எடப்பாடிக்கு வந்த சோதனை! பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்ட அதே சிக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures