Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எடப்பாடி ஜெயிச்சது எப்படி… திவாகரன், கவர்னர் சந்திப்பின் பின்னணியா?

February 19, 2017
in News
0
எடப்பாடி ஜெயிச்சது எப்படி… திவாகரன், கவர்னர் சந்திப்பின் பின்னணியா?

எடப்பாடி ஜெயிச்சது எப்படி… திவாகரன், கவர்னர் சந்திப்பின் பின்னணியா?

அ.தி.மு.க சட்டமன்றக் குழுவின் புதிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி பதவியில் நியமிக்கப்பட்ட பிறகு, அவரும் அவர் தரப்பினரும் கவர்னரைச் சந்தித்தனர்.

அப்போது, ‘ஆட்சியமைக்க எப்போது அழைப்பீர்கள்’ என்று கேட்டுள்ளனர். அதற்கு, கவர்னரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

இதற்கிடையில் திவாகரனும் அவரது மகனுமான ஜெய் ஆனந்தும் கவர்னரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன் பிறகே, எடப்பாடியை கவர்னர் அழைத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

இதன் பின்னணி பற்றிதான் அ.தி.மு.க-வினர் பரபரப்பாகப் பேசி வருகின்றனர். சசிகலா ஆதரவு அமைச்சர் ஒருவர், “எங்கள் தரப்பினர் கவர்னரைச் சந்தித்தபோது போதிய எம்.எல்.ஏ-க்கள் பலம் இருப்பதைப் புரிந்துகொண்டார். எங்களுக்கு உதவி செய்ய அவர் முடிவுசெய்தார்.

ஆனால், அவரை இயக்கும் ரிமோட், பி.ஜே.பி மேலிடம் கையில் இருந்ததால்… அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த ரிமோட்டின் பிடியிலிருந்து விடுவிக்க சில அரசியல் ரீதியான காயை நகர்த்தும்படி நேரடியாகச் சொல்லாமல் சாடைமாடையாக சொல்லியுள்ளார்.

இதை எங்கள் தரப்பினர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அதுதான் ஆட்சியமைக்கும் படலம். ஒருகட்டத்தில், கவர்னர் தரப்பினர் தற்போது சந்திக்க வந்தவர்களெல்லாம் சரிபட்டு வரமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

கவர்னர் தரப்புக்கும் சசிகலா தரப்புக்கும் அறிமுகமான பொதுவான நண்பர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். 1988-ல் இதுபோன்று ஒரு சூழல் வந்தபோது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மன்னார்குடி திவாகரன்தான் அரசியல் ஆலோசனை சொல்லிச் செயல்பட்டார்.

அதே திவாகரன், இப்போதும் இருக்கிறார். அவரை, தற்போது கவர்னரைச் சந்திக்க வரவழைக்கலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து கவர்னர், திவாகரன் சந்திப்பு நடந்திருக்கிறது.

இந்தச் சந்திப்பின்போது திவாகரன் தனது மகன் ஜெய் ஆனந்தை அழைத்துச் சென்றார். கவர்னர் சொன்ன சில முக்கியத் தகவல்களை திவாகரன் கவனமாகக் கேட்டுக்கொண்டு தலையாட்டிவிட்டு வந்திருக்கிறார்.

அதைத் தொடந்து சில ரகசிய நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். அடுத்த நாளே கவர்னரிடமிருந்து அ.தி.மு.க-வை ஆட்சியமைக்கக்கோரி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது” என்றார், அந்த அமைச்சர்.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது, அ.தி.மு.க-வை ஆட்சியமைக்க கவர்னர் கூறியதற்கு பின்னணியில், திவாகரன் இருந்தார் என்ற தகவல் அ.தி.மு.க பிரமுகர்கள் மத்தியில் பரவியதும் திவாகரன் மீதான இமேஜ் உயர்ந்திருக்கிறது.

Tags: Featured
Previous Post

புலனாய்வுப் பிரிவின் மற்றொரு சித்திரவதை முகாம் இரகசியங்கள் அம்பலம்!

Next Post

ஜெயலலிதா சமாதியில் சசிகலா செய்த மூன்று சபதங்கள்? வெளியான அதிர்ச்சி தகவல்!

Next Post
ஜெயலலிதா சமாதியில் சசிகலா செய்த மூன்று சபதங்கள்? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஜெயலலிதா சமாதியில் சசிகலா செய்த மூன்று சபதங்கள்? வெளியான அதிர்ச்சி தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை       

வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை       

June 22, 2026

Recent News

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை       

வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை       

June 22, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures