பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிச்சரிவு! டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலை மூடப்பட்டது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிச்சரிவு! டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலை மூடப்பட்டது.

பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பேர்ட்டா அருகே புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவினால் டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலை மூடப்பட்டது.
அதிகாலை 3மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சரிவிற்குள் டிரக்டர்-டிரெயிலர் ஒன்று அகப்பட்டு கொண்டது. ஆனால் சாரதி பனிச்சரிவிற்குள் அகப்பட்டு கொள்ளாது முயன்று தப்பிவிட்டார்.
பிரிட்டிஷ் கொலம்பியா சாரதிகள் நிலைமைகளை அவதானிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
கனரக இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பாதைகள் சுத்திகரிக்கப்படுகின்றன.
நெடுஞ்சாலை வெகு விரைவில் போக்குவரத்திற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

aval9aval8aval5aval4aval3aval2aval1aval

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *