Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழில் 17 வன்முறை குழுக்கள் : கண்டுபிடித்த புலனாய்வு பிரிவு

February 5, 2017
in News
0
யாழில் 17 வன்முறை குழுக்கள் : கண்டுபிடித்த புலனாய்வு பிரிவு

யாழில் 17 வன்முறை குழுக்கள் : கண்டுபிடித்த புலனாய்வு பிரிவு

யாழ், குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குழுக்களின் பெரும்பாலான குழுக்கள் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் இயங்கும் இந்த குழுக்கள் கடந்த சில வருடங்களில் குடாநாட்டில் 127 வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளன.

கூலிப்படையாக செயற்படும் இந்த குழுக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பலரை வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.

கொலை, வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்கி சேதப்படுத்துதல்,கப்பம் பெறுதல்,கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுதல் உட்பட பல குற்றச் செயல்களில் இந்த குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக வடக்கில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த குழுக்களில் ஆவா குழு மற்றும் டினோ குழு ஆகியன முக்கிய குழுக்கள் எனவும் அவற்றில் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களே உறுப்பினர்களாக இருப்பதாக புலனாய்வு பிரிவின் தகவல்கள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் இப்படியான ஆயுத குழு ஒன்றின் உறுப்பினர்களை பல கூரிய ஆயுதங்களுடன் பொலிஸார் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

யாழ், குடா நாட்டில் இயங்கும் இப்படியான பல குழுக்கள் பற்றிய தகவல்களை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதுடன் அவற்றின் உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வன்முறை குழுக்களை சேர்ந்த 221 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Tags: Featured
Previous Post

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அவகாசம் கோரவுள்ள அரசாங்கம்

Next Post

தீக்குளிக்க தயாரான தாய் : கேப்பாபுலவிற்கு விக்னேஸ்வரன் நேரடி விஜயம்

Next Post
தீக்குளிக்க தயாரான தாய் : கேப்பாபுலவிற்கு விக்னேஸ்வரன் நேரடி விஜயம்

தீக்குளிக்க தயாரான தாய் : கேப்பாபுலவிற்கு விக்னேஸ்வரன் நேரடி விஜயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures