ரொறொன்ரோ பாடசாலையில் கத்தி குத்து. வாலிபன் கடுமையான காயம்.
ரொறொன்ரோ-எற்றோபிக்கோவில் 20 வோட்விச் கிரசென்ட்டில் இஸ்லிங்டன் அவெனியுவிற்கு அருகில் அமைந்துள்ள திஸ்ரில்ரவுன் கல்லூரியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை கருதி பாடசாலை பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டது.
ஆண் மாணவன் ஒருவன் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஓருவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை பிற்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது.