ரொரன்ரோ பெரும்பாகம் உட்பட அனேகமான பகுதிகளில் உறைபனி மழை பொழியக்கூடும்!

ரொரன்ரோ பெரும்பாகம் உட்பட அனேகமான பகுதிகளில் உறைபனி மழை பொழியக்கூடும்!

ரொரன்ரோ பெரும்பாகம் உட்பட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களின் அனேகமான பகுதிகளில் உறைபனி மழை பொழியக்கூடும் என கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம், சிறப்பு வானிலை அறிக்கை ஒன்றின் மூலம் முன்னுரைத்துள்ளது.

ஒன்ராறியோவின் தென் மேற்கு பிராந்தயங்களில் ஆரம்பமாகும் இந்த உறைபனி மழை கிழக்கு நோக்கி நகர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை வேளையில் ரொரன்ரோ பெரும்பாகத்தினை நெருங்கும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையின் அளவு செவ்வாய்க்கிழமை காலை வேளைக்கு பின்னர் சற்று அதிகரிக்ககூடும் என்பதுடன், அந்த நிலைமை தொடரக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் செவ்வாய் இரவு அல்லது புதன் காலை வரையில் உறைபனி மழை காயப்படக்கூடும் எனவும் கனேடிய சுற்றச் சூழல் திணைக்களம் மேலும், தெரிவித்துள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *