Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சசிகலாவின் அதிரடி ஆரம்பம்..! அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

January 14, 2017
in News
0

சசிகலாவின் அதிரடி ஆரம்பம்..! அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

 அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆழ்வார் திருநகரை சேர்ந்த ஜே.எம்.பஷீர் நீக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக பொதுச்செயலாளராக அவரின் தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றுள்ளார்.

பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதையடுத்து தொண்டர்களை சந்திக்கும் முடிவில் சசிகலா இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சென்னை, விருகம்பாக்கம் பகுதி, ஆழ்வார் திருநகரை சேர்ந்த ஜே.எம்.பஷீர் நீக்கப்பட்டுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை, குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,

கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் ஆழ்வார் திருநகரை சேர்ந்த ஜே.எம்.பஷீர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி.. அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு பரிசீலனை

Next Post

அவுஸ்திரேலியாவில் பெய்த பலத்த மழையின் போது தண்ணீரில் சிக்கிய ஏலியன் உயிரினம்?

Next Post
அவுஸ்திரேலியாவில் பெய்த பலத்த மழையின் போது தண்ணீரில் சிக்கிய ஏலியன் உயிரினம்?

அவுஸ்திரேலியாவில் பெய்த பலத்த மழையின் போது தண்ணீரில் சிக்கிய ஏலியன் உயிரினம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures