மகன் கண் முன்னால் மகளை கொடூரமாக குத்தி கொலை செய்த தாயார்

மகன் கண் முன்னால் மகளை கொடூரமாக குத்தி கொலை செய்த தாயார்

எட்மோண்டன் நகருக்கு அருகில் உள்ள Sherbrooke என்ற பகுதியில் 50 வயதான தாயார் ஒருவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் கணவர் புற்றுநோயால் இருந்தது முதல் தாயார் ஒருவித மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மகன் மைக்கேல் சென்றுருந்த நேரத்தில் தாயாருக்கும் அவரது மகளான ரேச்சலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கடும் ஆத்திரத்தில் மூழ்கிய தாயார் கத்தியை எடுத்து மகளை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதே நேரத்தில் வெளியே சென்றுருந்த மகன் வீட்டிற்குள் நுழைய இக்காட்சியை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ரேச்சல்(21) துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தாயாரின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகன் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து சென்ற பொலிசார் தாயாரை கைது செய்து அவரிடம் இருந்த ஆயுதத்தை கைப்பற்றினர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாயார் மன அழுத்தத்தில் இருந்ததால் கொலை நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தாயார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி 10-ம் திகதி நீதிமன்றத்தில் விசாரணை துவங்க உள்ளது.

மேலும், ரேச்சலின் குடும்பத்திற்காக அப்பகுதி மக்கள் சுமார் 30 ஆயிரம் டொலர் வரை நிதி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *