அண்மையில் மனோகணேசன் கனடாவுக்கு வந்திருந்தார். தன்னுடைய வருகையை முன்னிட்டு, தான் தயாரிக்கும் படத்தை முன்னிட்டு ஒரு ஊடக சந்திப்பில் அவர் கலந்துகொண்டார். அதில் பலரும் பலவிதமாகக் கேள்வி எழுப்பினர்.
மனோ கணேசன் தன்னுடைய படத்திற்கு கிளிநொச்சி எனப் பெயர் வைத்துள்ளார். அத்துடன் அதில் தமிழ்ச்செல்வன் போன்ற ஈழப் போராளிகளின் பெயர்கள் பலவற்றையும் பயன்படுத்துகின்றார்.
இந்த நிலையில்தான் என்னிடம் ஒரு கேள்வி எழுந்தது. அதை அவரிடம் கேட்டேன். மலையக மக்களின் பிரதிநிதியான நீங்கள் ஏன் கிளிநொச்சி என்று பெயர் வைத்து ஈழப் போராளிகளின் பெயரை வைத்து படம் செய்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினேன்.
இதில் ஏதும் அரசியல் நோக்கம் உள்ளதா என்ற என் கேள்வியைக் கேட்டேன். அதற்கு தான் தலைவர், அரசியல்துறைப் பொறுப்பாளர் போன்ற போராளிகளைச் சந்தித்ததாகவும் ரவிராஜ் போன்றவர்கள் தனக்கு நட்பு என்றும் கூறினார்.
அதனால் அப்படி படம் எடுப்பதாக அவர் சொன்னபோதும் எனக்கு அது ஏற்புடையதாக இருக்கவில்லை. எங்கள் மண் சார்ந்த, எங்கள் போராளிகள் சார்ந்த படங்கள் சரியான வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை












