நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமும் அதனுடன், இணைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலையும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன்விளைவாக நாளை (06) புதன்கிழமை முதல் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இத்தொகுதியின் உருவாக்கம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்.

