Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொளுத்தி போடும் சசிகலாவின் கணவர்: உதயமாகிறதா? அம்மா திராவிட முன்னேற்ற கழகம்

December 12, 2016
in News
0

கொளுத்தி போடும் சசிகலாவின் கணவர்: உதயமாகிறதா? அம்மா திராவிட முன்னேற்ற கழகம்

பல்வேறு மாவட்டங்களில் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி உருவாகி வருகிறது என அதிமுகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

இதையடுத்து, அவரது உடல் மெரினா கடற்கரையில் முன்பு எம்.ஜி.ஆர் நினைவிடம் என்ற பெயரில் இருந்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக கட்சியில் அவர் வகித்து வந்த பொதுச் செயளாலர் பதவி காலியாக உள்ளதால், அவரது தோழி சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் போயஸ்கார்டன் சென்று அவரை வற்புறுத்தி வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

மேலும், அம்மாவை அடுத்து அவரை தான் சின்னம்மா என்று அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு நில அபகரிப்பு வழக்குகள் ஜெயலலிதாவால் போடப்பட்டு, அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன் தற்போது ஜெயலலிதா மறைந்த பின் தான் வெளியில் வந்துள்ளார்.

இதை தொடர்ந்து, இவர் தான் சசிகலாவை பதவி ஏற்க சொல்லி வரும் செய்திகள் அனைத்தையும் திட்டமிட்டு பரப்பி வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும், மேல்மட்ட நபர்கள் தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என நினைத்துக் கொண்டு சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து அவரிடம் சரணடைந்து விடுகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், தொண்டர்கள் சசிகலாவை விரும்பவில்லை என்பதால் பல மாவட்டங்களில் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி ஒன்று உருவாகி வருவதாகவும், இப்புதிய கட்சியின் தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் அதிமுக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கையால் இலங்கைக்கு ஏற்படவுள்ள நன்மைகள்!

Next Post

பிரித்தானியாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் சிரியா அகதி சிறுமிகள்!

Next Post
பிரித்தானியாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் சிரியா அகதி சிறுமிகள்!

பிரித்தானியாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் சிரியா அகதி சிறுமிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures