Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்ச்சையில் சிக்கிய செல்வம் அடைக்கலநாதன்: CIDக்குச் சென்ற முறைப்பாடு!

November 12, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
செல்வம் அடைக்கலநாதனின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு: ஆராய கூடியுள்ள குழுக் கூட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மீது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் இவ்வாறு முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ரஜீவ்காந்த் இன்றையதினம் (11.11.2025) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குரல் பதிவு

மேலும் கருத்து தெரிவித்த ராஜ்குமார் ரஜீவ்காந்த், “செல்வம் அடைக்கலநாதன் தனது கட்சியில் உள்ள ஒரு உறுப்பினர் சுரேஷ் என்பவருடன் தொலைபேசியில் உரையாடுகின்ற ஒரு குரல் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய செல்வம் அடைக்கலநாதன்: CIDக்குச் சென்ற முறைப்பாடு! | Cid Investigation Against Selvam Adikkalanathan

குறித்த குரல் பதிவில் பல்வேறு விடயங்கள் உரையாடப்படுவதுடன் செல்வம் அடைக்கலநாதன் சுரேஷ் என்ற நபருடைய உயிருக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து, சில நாட்களின் பின்னர் சுரேஷ் என்கின்ற நபர் நீர்கொழுப்பு பகுதியிலே தவறான முடிவெடுத்து உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது.

குறித்த நபர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.

மேலும், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதுடன் இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அக்கறை கொள்வதாக இல்லை.

எனவே, இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என தாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ராஜ்குமார் ரஜீவ்காந்த் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அண்மைய தினங்களாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் (09.11.2025) நடைபெற்ற ரெலோ கட்சியின் தலைமைக் குழு கூட்டத்திலும் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Previous Post

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘ஐபிஎல் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

Next Post

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி மாடியில் இருந்து வீழ்ந்து படுகாயம்

Next Post
உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி மாடியில் இருந்து வீழ்ந்து படுகாயம்

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி மாடியில் இருந்து வீழ்ந்து படுகாயம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures