யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைக்குழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி யாழப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன்போது செம்மணி மனிதப் புதைக்குழியை பார்வையிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கொழும்பு சொகுசு பேருந்து அங்குரார்ப்பன நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
