Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடித்திருக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

February 21, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடித்திருக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி நட்ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி , நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் இவர்களுடன் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா ஆகிய நால்வரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் “பிக் பொஸ்” முத்துக்குமரன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

அறிமுக இயக்குநர் ஜெ. பி. பிரிட்டோ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி, சுரேஷ் சக்கரவர்த்தி, சுரேஷ் மேனன், வடிவுக்கரசி, கனிகா, துளசி, லிசி அண்டனி, மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், விஜி சந்திரசேகர், நமோ நாராயணன், ஏகன், விக்னேஷ் காந்த், ரிஷி காந்த் , நிவாஸ் ஆதித்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மல்லிகார்ஜுன் – மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகளுக்கு கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் பின்னணி குரல் கொடுத்திருப்பது ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது.

இதற்காக நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் பங்கு பற்றி இயக்குநர் பேசுகையில், ” அம்மாவை வைத்து இதற்கு முன் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவற்றிலிருந்து இந்த திரைப்படம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். இந்த கதை மீதான நம்பிக்கையின் காரணமாகத்தான் இப்படத்தில் அனைத்து நட்சத்திரங்களும் நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். இந்தக் கதை ஒரு நரேட்டிவ் பாணியில் சொல்லப்பட்டிருக்கும் கதை. இதன் உச்சகட்ட காட்சி யாரும் யூகித்திருக்க இயலாது. இதை படத்தை பார்த்த அனைவரும் உணர்வார்கள். ரசிப்பார்கள். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

Previous Post

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்! 

Next Post

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Next Post
ஈழப் பள்ளிக்கூடங்களின் பெருமைகள்

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures