Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி பெற்றவர்களின் முழுமையான பட்டியலை வெளியிடுங்கள் | உதய கம்மன்பில

December 26, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை அரசாங்கம் முழுமையாக வெளியிட வேண்டும். உரிய விசாரணைகளை மேற்கொண்டு நிதியை மீள அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டையில் 25ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுள்ளதாக மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவியளிப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது. 2005- 2024 வரையான காலப்பகுதியில் அரசியல் அதிகாரத்துடன் அரசியல்வாதிகள் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து கோடிக்கணத்தில் நிதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

முறையற்ற வகையில் நிதி பெற்றவர்களின் முழு விபரத்தையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் அத்துடன் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அந்நிதியை மீள அறவிட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன்.

தேசிய மக்கள் சக்தி 75 ஆண்டுகால அரசியல் கலாச்சாரத்தையும் விமர்சித்து தான் ஆட்சிக்கு வந்தது.ஆகவே கடந்த காலங்களில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்றார்.

Previous Post

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த நாடாளவிய ரீதியில் தன்னார்வ தொண்டர் குழு | நளிந்த ஜயதிஸ்ஸ

Next Post

வயலில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு!

Next Post
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

வயலில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures