Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேல் மாகாணத்தில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு தடைவிதிக்கும் சுற்றுநிருபம் வாபஸ் | மஹிந்த ஜயசிங்க

December 26, 2024
in News, Sri Lanka News
0
மேல் மாகாணத்தில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு தடைவிதிக்கும் சுற்றுநிருபம் வாபஸ் | மஹிந்த ஜயசிங்க

மேல்மாகாணத்தில் அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் தங்கள் பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிட்டு மேலதிக வகுப்பு நடத்துவதை தடை செய்து மாகாண கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டிருந்த சுற்று நிருபம் வாபஸ்பெறப்பட்டுள்ளதாக தொழில் இராஜாங்க அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் தங்கள் பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிட்டு மேலதிக வகுப்பு நடத்துவதை தடை செய்து மாகாண கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டிருந்த சுற்று நிருபம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேல்மாகாணத்தில் அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் தங்கள் பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிட்டு மேலதிக வகுப்பு நடத்துவதை தடை செய்து மாகாண கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டிருந்த சுற்று நிருபம் வாபஸ்பெறப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு வேண்டுமென்றே அசௌகரியத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சில அதிகாரிகளின் சுற்றறிக்கை மற்றும் கடிதங்களை ரத்து செய்வது அவசியமாகும்.

இவ்வாறான நடவடிக்கைகளின்போது நாங்கள் நேரடியாக தலையிட்டு அரசாங்கத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். அதனால் அரச அதிகாரிகள் காலாவதியான பணி நடைமுறைகளை கைவிட்டு, நாட்டை புதிய மற்றும் முற்போக்கான திசையில் கொண்டு செல்ல அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள், சம்பள முரண்பாடுகள், இடமாற்றக் கொள்கைகள், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்புகளைப் பெறுவதில் சிரமங்கள் போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், அவர்கள் மேலதிக வகுப்பு நடத்துவதை தடை செய்வதற்கு ஏன் முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்கிறோம் என்றார்.

எவ்வாறாயினும் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது, அமைச்சரவை பேச்சாளர் அமைச்ச நளிந்த ஜயதிஸ்ஸ இதுதொடர்பில் குறிப்பிடுகையில், குறித்த சுற்று நிருபத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தெரிவித்திருந்தார்.

குறித்த சுற்று நிருபம் கடந்த 20ஆம் திகதி மேல்மாகாண கல்விச் செயலாளர் நிஷான்தி ஜயசிங்கவின் கையொப்பத்துடன் விநியோகிக்கப்பட்டிருந்தது.

அதில், மாகாணத்தில் சில ஆசிரியர்கள் தங்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களிடம் பணம் அறவிட்டுக்கொண்டு வேறு இடங்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவதாகவும் மேலதிக வகுப்புகளுக்கு வருகை தராமல் இருக்கும் மாணவர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் மேல்மாகாண ஆசிரியர்கள் தங்களின் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை நேரத்தில், பாடசாலை நேரத்துக்கு பின்னர் அல்லது வார இறுதி விடுமுறை தினங்கள் மற்றும் அரச விடுமுறை தினங்களில் பல்வேறு வெளிப்பிரதேசங்களில் பணம் அறவிட்டுக்கொண்டு மேலதிக வகுப்பு நடத்து நடத்துவதை குறித்த சுற்று நிருபம் மூலம் தடை செய்திருந்தது.

அத்துடன் சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆலாேசனைகளை கருத்திற்கொள்ளாமல் செயற்படும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் எனவும் குறித்த சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Previous Post

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Next Post

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த நாடாளவிய ரீதியில் தன்னார்வ தொண்டர் குழு | நளிந்த ஜயதிஸ்ஸ

Next Post
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த நாடாளவிய ரீதியில் தன்னார்வ தொண்டர் குழு | நளிந்த ஜயதிஸ்ஸ

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த நாடாளவிய ரீதியில் தன்னார்வ தொண்டர் குழு | நளிந்த ஜயதிஸ்ஸ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026

Recent News

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures