Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிழக்கிலிருந்து முதலாவது பெண் கிரிக்கெட் மத்தியஸ்தர் ஆனார் எம்மா குளோறியா

October 29, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
கிழக்கிலிருந்து முதலாவது பெண் கிரிக்கெட் மத்தியஸ்தர் ஆனார் எம்மா குளோறியா

கிரிக்கெட் மத்தியஸ்தராக மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை எம்மா குளோறியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் மத்தியஸ்தர்களுக்கான பரீட்சையில் சித்தி அடைந்ததை அடுத்து அவர் 5ஆம் நிலை மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து கிரிக்கெட் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ள முதலாவது பெண் எம்மா குளோறியா ஆவார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுக்குட்பட்ட பெண்கள் கடின டென்னிஸ் பந்து (Hard Tennis Ball) கிரிக்கெட் போட்டியில் மத்தியஸ்தராக எம்மா குளோறியா முதல் தடவையாக கடமையாற்றினார்.

மட்டக்களப்பு சிசிலியா மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவியான இவர் அக் கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவி ஆவார்.

தற்போது வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியையாக கடமையாற்றிவரும் எம்மா குளோறியா, இலங்கை கிரிக்கெட் மத்தியஸ்தர் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளை மத்தியஸ்தர்களில் ஒருவாராக இடம்பெறுகிறார்.

இவர் வலய, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பல்தரப்பட்ட விளையாட்டுக்களில் பங்குபற்றி மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

Previous Post

அரச ஊழியர்களை வைத்து காய் நகர்த்தியுள்ள ரணில்: அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

Next Post

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது பொய் –  கலாநிதி ஹர்ஷ டி சில்வா

Next Post
இலங்கையில் கடந்த வருடம் சேமிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவின் இன்றைய பெறுமதி! 

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது பொய் -  கலாநிதி ஹர்ஷ டி சில்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures