Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

டிமான்டி காலனி 2 – விமர்சனம்

August 17, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
அருள்நிதி நடிக்கும் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் பாடல் வெளியீடு

தயாரிப்பு : பிடிஜி யுனிவர்சல் & ஞானமுத்து பட்டறை & வைட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்

நடிகர்கள் : அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன் , அர்ச்சனா ரவிச்சந்திரன், சர்ஜனோ காலித் மற்றும் பலர்.

இயக்கம்: அஜய் ஞானமுத்து

மதிப்பீடு: 3 / 5

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டில் வெளியான ‘டிமான்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஹாரர் திரில்லர் திரைப்படம்- அந்த பிரிவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

‘டிமான்டி காலனி’ படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் கதையின் நாயகனான சீனிவாசன் ( அருள்நிதி) இறந்து விடுவது போல் காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் இரண்டாம் பாகத்தில் தொடக்கத்திலேயே ஸ்ரீனிவாசன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக  காண்பித்திருக்கிறார்கள். இதனுடன் அவரை யார் காப்பாற்றினார்கள்? எதற்கு காப்பாற்றினார்கள்? என்ற வினாவும் எழும். இதனுடன் டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தில் சங்கிலி ஒன்றும் இடம் பெற்றிருக்கும். அது என்ன ஆனது? என்ற கேள்வியும் எழும். இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இரண்டாம் பாகத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.

சுந்தர் சி – ராகவா லோரன்ஸ் போன்ற பேய் கதையை கொமர்ஷலாக இயக்கும் இயக்குநர்கள் போல் இல்லாமல் அஜய் ஞானமுத்து கொஞ்சம் மெனக்கட்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அதிலும் குறிப்பாக கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் சாத்தானை வழிபடுபவர்கள் அமானுஷ்யங்களும், மர்மங்களும் மறைந்திருக்கும் புத்தகம் என சில விடயங்களை இணைத்து ரசிகர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தை வழங்கி இருக்கிறார்.

ஸ்ரீனிவாசனுக்கு ரகு( அருள் நிதி) எனும் ஒரு சகோதரர் இருப்பது போன்று கதையை நீட்டித்து கதையின் நாயகனுக்கு ஓரளவு முக்கியத்துவம் தருகிறார் இயக்குநர். டெபி ( ப்ரியா பவானி சங்கர்) யின் காதல் கணவரான ஷாம் ( சர்ஜினோ காலித்) புற்றுநோயிலிருந்து சிகிச்சை பெற்று குணமான பிறகும், தற்கொலை செய்து கொள்கிறார்.‌ ஷாமை அளவு கடந்து நேசிக்கும் டெபி- ஷாம் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பதை  அறிந்து கொள்வதில் தீவிரம் காட்டுகிறார். இதற்காக தாவோஷி ( செரிங் டோர்ஜி) எனும் சீன துறவியின் உதவியை நாடுகிறார்.

ரகு – டெபி – தா வோ ஷி ஆகிய மூவரும் சீன உணவகம் ஒன்றில் சந்திக்கும்போது, அவர்களை அமானுஷ்ய சக்தி ஆக்கிரமிக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

இதில் டெபியாக நடித்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தானும் ஒரு திறமையான நடிகை என்பதை இதில் நிரூபித்திருக்கிறார். ரகு – ஸ்ரீ னிவாசன் என இரு வேறு கதாபாத்திரங்களில் அருள்நிதி திரையில் தோன்றி, ‘நான் சுயநலவாதி தான். ஆனால் கெட்டவன் இல்லை’ என்று கூறி ரசிகர்களிடத்தில் அனுதாபத்தை அள்ளி, ரசிக்க வைக்கிறார்.‌ சில இடங்களில் பஞ்ச் வசனம் பேசி, சிரிக்கவும் வைக்கிறார். நடிகர் முத்துக்குமாரின் குணச்சித்திர நடிப்பு கவனம் ஈர்க்கிறது. சீன துறவியாக நடித்திருக்கும் நடிகர் செரிங் டோர்ஜி- சாமுவேலின் தந்தையாக நடித்திருக்கும் அருண்பாண்டியன் ஆகியோர் திரையில் தோன்றி  இயக்குநரின் கனவை தங்களால் முடிந்த அளவுக்கு நனவாக்கி இருக்கிறார்கள்.

இரண்டாம் பாதியை விட முதல் பாதியில் ரசனைக்குரிய விடயங்கள் அதிகம். அதிலும் குறிப்பாக படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் பாணியிலான காட்சிகள்  படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் + கலை இயக்குநர் + பின்னணி இசை அமைப்பாளர் + படத்தொகுப்பாளர் + என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இயக்குநருடன் கரம் கோர்த்து  ரசிகர்களுக்கு ஹாரர் திரில்லிங் அனுபவங்களை வழங்குகிறார்கள். இதனை டிமான்டி காலனியின் முதல் பாகத்துடன் ஒப்பிடக்கூடாது.

பட்ஜட் அதிகம் என்றாலும் வி எஃப் எக்ஸ் காட்சிகளில் துல்லியமான நேர்த்தி மிஸ்ஸிங். இருப்பினும் வெகுஜன ரசிகன் இந்த டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை ரசிக்கவே செய்கிறான்.‌

டிமான்டி காலனி 2 – தோல்வி அடையாத இரண்டாம் பாகம்.

Previous Post

விஜய் நடிக்கும் ‘கோட் GOAT’ திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக் குழு

Next Post

அனைத்துலக மனித உரிமை அமைப்பில் தமிழர் உரிமைக்கு போராடிய விராஜ் மென்டிஸ்! – நவீனன்

Next Post
அனைத்துலக மனித உரிமை அமைப்பில் தமிழர் உரிமைக்கு போராடிய விராஜ் மென்டிஸ்! – நவீனன்

அனைத்துலக மனித உரிமை அமைப்பில் தமிழர் உரிமைக்கு போராடிய விராஜ் மென்டிஸ்! - நவீனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026

Recent News

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures