Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

May 26, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

இலங்கையை (srilanka) சூழவுள்ள கடல் பிரதேசத்தில் கடும் சீற்றம் காணப்படுமென  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (23.5.2024) வெளியிட்டுள்ள அறிவித்தலில் இதனைக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று (25) அதிகாலை 5.30 மணிக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை | Sri Lanka Bad Eavy Weather Warnings Today

அதனைத் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து இன்று இரவு 11.30 மணியளவில் இந்த புயல் மேலும் வலுவடையுமென திணைக்களம் குறிப்பிடுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யுமென திணைக்களம் தெரிவிக்கின்றது.

வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டின ஏனைய பகுதிகளில் அவ்வப்போது காற்று 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை | Sri Lanka Bad Eavy Weather Warnings Today

இதேவேளை, களு கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் சில இடங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

20 ஆம் திகதி வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இன்று இரவு 9 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பிரதேச மக்களுக்கு தெரிவிக்கப்படுவதுடன், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வடக்கில் ஆளுநரின் அடாவடி: ரணிலுக்கு பறந்த கடிதம்

Next Post

ஜனாதிபதியின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு | கறுப்புக் கொடி காட்டிய காணாமல ஆக்கப்பட்டோரின் உறவுகள் 

Next Post
ஜனாதிபதியின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு | கறுப்புக் கொடி காட்டிய காணாமல ஆக்கப்பட்டோரின் உறவுகள் 

ஜனாதிபதியின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு | கறுப்புக் கொடி காட்டிய காணாமல ஆக்கப்பட்டோரின் உறவுகள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures