Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மன்னாரில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக சுவீகரிக்கும் கம்பெனிகள்

May 23, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இனப்பிரச்சினைக்கான  தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே  ஏற்போம் | எம்.ஏ.சுமந்திரன்

மன்னார் தீவக பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான காணிகளை தொடர்ச்சியாக சில காணி இடைத்தரகர்கள் ஊடாக சில தனியார் கம்பெனிகள் சட்ட விரோதமாக சுவீகரிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசிக்கும் முகமாக மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் பாதிக்கப்பட்ட தனியார் காணி உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை (23) மன்னார்  மெசிடோ அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மன்னார் நடுக்குடா, கொன்னையன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் பாரம்பரியமாக தாங்கள் வசித்துவரும் காணிகளை தனியார் நிறுவனங்கள் தொடர்ச்சியாக வேலிகள் அடைத்து கையகப்படுத்துவதாகவும், இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தனியார் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தனியார் காணி ஒன்றை கொள்வனவு செய்யும் சில நிறுவனங்கள், அந்த காணிகளை மாத்திரமின்றி அதை சூழவுள்ள காணிகளையும் சுவீகரிப்பதாகவும் கூறியுள்ளனர். 

இந்த விடயம் தொடர்பாக எடுக்கவேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றி தனியார் காணி உரிமையாளர்களுக்கு சட்டத்தரணி சுமந்திரனால் தெளிவுபடுத்தப்பட்டதுடன், இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயாரிப்பது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அதேவேளை இம்மாதம் சட்ட விரோதமாக காணி சுவீகரிப்பில் ஈடுபட்ட நிறுவனத்துக்கு எதிராக முதல் கட்டமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தனியாருக்கு சொந்தமான காணிகள் தனி நபர்களாலும் சில நிறுவனங்களாலும் அபகரிக்கப்பட்டு, கனிய மணல் அகழ்வுக்கு வழங்குவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஸ்ரீலங்காமீது அழுத்தம்

Next Post

கனடா ஊடகவியலாளர்களை இழிவுபடுத்திய முல்லை மதி என்பவர் யார்?

Next Post
கனடா ஊடகவியலாளர்களை இழிவுபடுத்திய முல்லை மதி என்பவர் யார்?

கனடா ஊடகவியலாளர்களை இழிவுபடுத்திய முல்லை மதி என்பவர் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures