Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

‘கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..’

March 26, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..’

தமிழ் திரையிசை பாடல்களில் காதல் உணர்வுகளை பிரதிபலிக்கும் பாடலுக்கு இளம் தலைமுறை ரசிகர்களிடத்தில் தனி மவுசு உண்டு.

அதிலும் பாடலின் தொடக்க வரிகள், சரணங்கள் காதல் உணர்வை நுட்பமாகவும், எளிமையாகவும் விவரித்திருந்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விடும்.

அந்த வகையில் கதிர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘மாணவன்’ எனும் திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் இடம்பெற்ற ‘கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி.. ‘என்ற பாடல் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறது.

Director S. L. S. Henryஇயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாணவன்’ எனும் திரைப்படத்தில் கதிர், இயக்குநரும், நடிகருமான கரு. பழனியப்பன், மாஸ்டர் மகேந்திரன், யுவ லட்சுமி, அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கல்லூரி பயிலும் பருவத்தில் மாணவருக்கு ஏற்படும் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபார்ச்சூன் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. எம். தென்னிலவன் மற்றும் டி. டேனியல் கிறிஸ்டோபர் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் சந்துரு எழுத பின்னணி பாடகர் பிரதீப் குமார் பாடியிருக்கிறார்.

  ‘கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..’ என்ற பாடலின் பல்லவி முதல் முறை உச்சரிப்பதற்கு கடினமாக இருந்தாலும், பாடலை கேட்டு கேட்டு பாடும் போது ரசிக்கத் தோன்றுகிறது. மேலும் இந்தப் பாடலில் பாடல் வரிகள் தெளிவாகவும், துல்லியமாகவும் கேட்பதால் பாமர மக்களின் செவிகளுக்கு இனிய விருந்தை அளித்திருக்கிறது. இதன் காரணத்தினால் தான் இப்பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை  படைத்திருக்கிறது.

Previous Post

இளநீர் ஏற்றுமதி மூலம் இலங்கை ஒரு மாதத்தில் ஈட்டிய வருமானம் 3,400 மில்லியன்!

Next Post

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் மீது சைபர் தாக்குதல்

Next Post
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் மீது சைபர் தாக்குதல்

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் மீது சைபர் தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures