Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ள நியூஸிலாந்து ரி 20 அணி

March 15, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ள நியூஸிலாந்து ரி 20 அணி

பாகிஸ்தானுக்கு நியூஸிலாந்து ரி20 கிரிக்கெட் அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விஜயம் செய்யவுள்ளது.

இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.

பாகிஸ்தானை ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி சென்றடையவுள்ள நியூஸிலாந்து, ராவல்பிண்டியில் ஏப்ரல் 18ஆம் திகதிக்கும் 21ஆம் திகதிக்கும் இடையில் நடைபெறவுள்ள முதல் மூன்று சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்.

தொடர்ந்து லாகூர், கடாபி விளையாட்டரங்கில் ஏப்ரல் 25, 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கடைசி இரண்டு போட்டிகளில் பாகிஸ்தானை நியூஸிலாந்து எதிர்த்தாடும்.

நியூஸிலாந்து பாதுகாப்பு குழுவினர் கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து பாதுகாப்பு நிலைவரங்களை ஆராய்தனர்.

இதனை அடுத்தே நியூஸிலாந்து அணியினர் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தமது நாட்டு விளையாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா பொன்ற நாடுகள் பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைவரங்களை ஆராய்வது இயல்பான விடயமாகும்.

2022க்குப் பின்னர் நியூஸிலாந்து அணியினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வது இது மூன்றாவது தடவையாகும்.

பாகிஸ்தானுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு நியூஸிலாந்து அணியினர் 2022 பிற்பகுதியில் பாகிஸ்தானுக்கு   விஜயம் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 2023 ஏப்ரல் மாதம் 5 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் 5 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் நியூஸிலாந்து அங்கு விளையாடியிருந்தது.

Previous Post

எவரெஸ்ட் உச்சியை அடைந்த ஜயந்திக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விருது

Next Post

தமிழர்களின் பூர்விக அடையாளம் ஒழிக்கப்படுகின்றது: செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்

Next Post
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த எமது மக்களை பிரித்தானியா அரவணைத்தது – செல்வம் 

தமிழர்களின் பூர்விக அடையாளம் ஒழிக்கப்படுகின்றது: செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures