Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எனது கணவரின் மரணத்திற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் | யாழில் குற்றச்சாட்டு

March 13, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எனது கணவரின் மரணத்திற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் | யாழில் குற்றச்சாட்டு

எனது கணவரின் kரணத்திற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். 

காரைநகர் பகுதிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி  இருவரையும் வழியில் கடத்திச் சென்ற வன்முறை கும்பல் கணவனை படுகொலை செய்தது. 

இது தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில், 

காரைநகருக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் நானும் எனது கணவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் எம்மை வழிமறித்த கும்பல் வாகனத்தில் எம்மை கடத்த முயற்சித்தனர். 

அவ்வேளை, நானும் கணவரும் அவர்களிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த கடற்படை முகாமுக்குள் தஞ்சம் புகுந்தோம். கடற்படையினர் எம்மை அங்கிருந்து விரட்டினார்கள். 

“எங்களை கடத்த போறாங்க, எங்களை காப்பாற்றுங்க” என கடற்படையிடம் மன்றாடினோம். ஆனால், அவர்கள் எங்களை முகாமில் இருந்து துரத்தினார்கள். 

அவ்வேளையிலே எம்மை அவர்கள் வாகனத்தில் கடத்திச் சென்றனர். 

கடற்படையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு, எமக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், எனது கணவரின் உயிர் பிரிந்திருக்காது. எனது கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு விதத்தில் காரணம் என தெரிவித்தார். 

உயிரிழந்தவரின் உறவினர்கள் கூறுகையில்,

கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காமல் இருந்தாலும், தமது முகாமுக்கு அருகில் வாகனத்துடன் நின்ற கும்பலை துரத்திவிட்டு, இவர்களை அனுப்பி வைத்திருக்கலாம். அல்லது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருக்கலாம். 

கடற்படையின் கண் முன் இருவரை வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச் சென்றபோதும், கடற்படையினர் அதனை தடுக்காமலும், கடத்தல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்காமலும் இருந்ததால், கடற்படை மீதும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது என தெரிவித்தனர்.  

Previous Post

மன்னார் நகர சபையின் அதிரடி நடவடிக்கை

Next Post

ஜப்பான் கிரிக்கெட்டுக்கு இலங்கை உதவவுள்ளது

Next Post
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை முதல்  ஆரம்பம்

ஜப்பான் கிரிக்கெட்டுக்கு இலங்கை உதவவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures