Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி. முத்துகுமாரன தெரிவு – தேர்தல்கள் ஆணைக்குழு

February 29, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்துக்கு எஸ்.சி.முத்துகுமாரனவை நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. எஸ்.சி.முத்துகுமாரன எதிர்வரும் வாரம் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

இலக்கம் 17 அனுராதபுரம் தேர்தல் தொகுதிக்காக 1981ஆம் ஆண்டு 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 62ஆவது உறுப்புரையின் பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட உத்திக பிரேமரத்ன பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். 

அதனை தொடர்ந்து, அரசியலமைப்பின் 99(13)(ஆ) உப பிரிவுக்கு அமைய மற்றும் 1981ஆம் ஆண்டு 01ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 64(2) உறுப்புரைக்கு அமைய செயற்பட்டு அனுராதபுரம் தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி.முத்துகுமாரன தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த உத்திக பிரேமரத்ன கடந்த 26ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்திருந்தார்.

அதனை தொடந்து ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1)ஆம் பிரிவின் பிரகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள உறுப்பினர் பதவிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பெயர் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

தலைமன்னாரில் 10 வயது சிறுமி கொலை| தொடரும் நடவடிக்கை 

Next Post

 “அஸ்வெசும”  பெறத் தகுதியுடைய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் – ஜனாதிபதி

Next Post
நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் நாளை பதவி பிரமாணம்

 "அஸ்வெசும"  பெறத் தகுதியுடைய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் - ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures