Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இஸ்ரேல் இனப்படுகொலை நோக்கத்துடன் செயற்படுகின்றது | சர்வதேச நீதிமன்றில் தென்னாபிரிக்கா வாதம்

January 12, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
இஸ்ரேல் இனப்படுகொலை நோக்கத்துடன் செயற்படுகின்றது | சர்வதேச நீதிமன்றில் தென்னாபிரிக்கா வாதம்

இஸ்ரேல் இனப்படுகொலை நோக்கத்துடன் செயற்படுகின்றது என தென்னாபிரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்த இனப்படுகொலை வழக்குவிசாரணை இன்று ஹேக்கின் சர்வதேச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது தென்னாபிரிக்கா சார்பில் வாதத்தை முன்வைத்த தென்னாபிரிக்காவின் உயர்நீதிமன்ற சட்டத்தரணி அடிலா ஹாசிம் இஸ்ரேல் திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுகின்றது அதன் நோக்கங்கள் இனப்படுகொலையை வெளிப்படுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களை குறிவைத்து ஆயுதங்களை பயன்படுத்திய பாரியளவிலான படுகொலைகளில் அழிவுகளில் ஈடுபடுகின்றது மேலும் பொதுமக்களை சினைப்பர் தாக்குதல் மூலம் இலக்குவைக்கின்றது.

பாலஸ்தீனியர்களிற்கான பாதுகாப்பு வலயங்களை அறிவித்த பின்னர் அவற்றின் மீது குண்டுவீச்சுதாக்குதலை மேற்கொள்கின்றது.

காசாவில் பாலஸ்தீனியர்களிற்கான அத்தியாவசிய தேவைகளான உணவு நீர் சுகாதாரம் எரிபொருள் தொடர்பாடல் போன்றவற்றை மறுக்கின்றது 

சமூக கட்டமைப்புகளை வீடுகளை பாடசாலைகளை மசூதிகளை தேவாலயங்களை மருத்துவமனைகளை அழிக்கின்றது.

பெருமளவானவர்களை கொலை செய்கின்றது கடும் காயங்களிற்குட்படுத்துகின்றது பெருமளவு சிறுவர்களை அனாதைகளாக்கியுள்ளது.

இனப்படுகொலைகள் ஒருபோதும்முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவதில்லை ஆனால் இந்த நீதிமன்றத்திற்கு 13 வார ஆதாரங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஆப்கனில் 6.1 ரிக்டரில் பூகம்பம்

Next Post

யாழ். வடமராட்சியில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள்!

Next Post
யாழ். வடமராட்சியில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள்!

யாழ். வடமராட்சியில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures