Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

January 7, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், விற்பனைக்கு தயாராக மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (05) மாலை இடம்பெற்ற குறித்த முற்றுகை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி கிராம அலுவலர் பகுதியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கிராம அமைப்புக்கள் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் தமது கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை இனம் கண்டு அவர்களை பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து தமது கிராமத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கமைய புதுக்குடியிருப்பு திம்பிலி கிராமத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் நேற்றயதினம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைவாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் , பொலிஸ் கொஸ்தாபல்களான ஜே.நிக்கலஸ் (91796) ,பி.விதுரன்( 96522), வி.கவிராஜ் (105152), அபயகோன் (80425) உள்ளிட்ட பொலிஸார், கிராம சேவையாளர் தமிழ் செல்வன், கிராம அபிவிருத்தி சங்கம், கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

அப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் உட்பட்ட குழுவினர் விற்பனைக்கு தயாரான நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டிருந்தது. எனினும் சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

திம்பிலி கிராம மக்கள் மற்றும் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு எனவும், போதை பாவனையை ஒழிக்க முன்வந்திருந்தமை பாராட்டத்தக்கது என இதன்போது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார்.

Previous Post

யாழ். கொட்டடியில் டெங்கு ஒழிப்பு | 8 பேருக்கு எதிராக வழக்கு | 12 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை

Next Post

நோர்வேயில் தமிழ் பெண் வைத்தியர் படுகொலை

Next Post
நோர்வேயில் தமிழ் பெண் வைத்தியர் படுகொலை

நோர்வேயில் தமிழ் பெண் வைத்தியர் படுகொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures