Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜப்பான் பூகம்பம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு | மீட்பு பணிகள் தீவிரம்

January 3, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
ஜப்பான் பூகம்பம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு | மீட்பு பணிகள் தீவிரம்

ஜப்பானை தாக்கிய கடும் பூகம்பம் மற்றும் அதன் பின்னரான தொடர்ச்சியான நில அதிர்வுகள் காரணமாக 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள்இடம்பெறுவதை தொடர்ந்து சேதங்கள் குறித்த புதிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

நொட்டோ வளைகுடாவை தாக்கியபூகம்பம் காரணமாக கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ள அதேவேளை தீபரவல் காணப்பட்டதுடன் சுனாமியும் தாக்கியுள்ளது.

செவ்வாய்கிழமை சுனாமிஎச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது போதிலும் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான நொட்டோவுடனான தொடர்புகள் தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

பூகம்பத்தினால்வீதிகள்அழிந்ததால் அந்த பகுதிக்கு தரைமார்க்கமாக செல்வது கடினமாக உள்ளதாக ஜப்பான் பிரதமர்தெரிவித்துள்ளார்.

பூகம்பம் தாக்கிய பகுதிக்கு ஹெலிக்கொப்டர்கள் மூலம் சென்றுள்ள அதிகாரிகள் சேதமடைந்த வீடுகள் வீதிகளையும் தீப்பரவலையும் அவதானித்துள்ளனர்.

27000 பேர் வசிக்கும் வஜிமா நகரமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது இந்த நகரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். வஜிமா கரையோர நகரம் அதன் காலை சந்தை மற்றும் அரக்கு பொருட்களிற்கு பிரசித்தமானது.

பூகம்பத்தின் பின்னர்இந்த நகரத்தின் தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களில் இருந்து தீ பரவுவதை அவதானிக்க முடிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூகம்பத்தின் பின்னர்மூண்டதீயினால்100க்கும் மேற்பட்ட கடைகளும் வீடுகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

சிறிய சுனாமியும் இந்த நகரத்தை தாக்கியுள்ளது.

பேரழிவை சந்தித்துள்ள பகுதிகளில் பொலிஸார் தீயணைப்பு படையினருடன் ஜப்பானின் சுயபாதுகாப்பு படையினரும் இணைந்துள்ளதாக பிரதமர் கிசிடா தெரிவித்துள்ளார்.

Previous Post

காசாவில் இஸ்ரேலிய படையினருடன் இணைந்து போரிட்ட அவுஸ்திரேலியரான கப்டன் சிவன் ஹமாஸ் தாக்குதலில் பலி

Next Post

மணிப்பூரில் 3 பேர் சுட்டுக் கொலை | ஊரடங்கு அமுல்

Next Post

மணிப்பூரில் 3 பேர் சுட்டுக் கொலை | ஊரடங்கு அமுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures