Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காசாவிற்கு ஆதரவான செய்தி – ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடுவேன் – உஸ்மான் கவாஜா

December 14, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
காசாவிற்கு ஆதரவான செய்தி – ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடுவேன் – உஸ்மான் கவாஜா

காசாவிற்கு ஆதரவான செய்திகளை வெளிப்படுத்தக்கூடாதுஎன்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின்  உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக  அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் உஸ்மன் கவாஜாதெரிவித்துள்ளார்.

குரலற்றவர்களிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவதை தடுக்கும் ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமூகஊடகத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இதனை தெரிவித்துள்ள உஸ்மான் கவாஜா தனது செய்தி அரசியல் செய்தியல்ல என குறிப்பிட்டுள்ளதுடன் தன்னை ஏசுவதற்காக தன்னுடன் தொடர்புகொள்பவர்களே பெரும் பிரச்சினையாக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நான் அவர்களின் கருத்தினை மதிக்கின்றேன் ஆனால் நான் போராடி அவர்களின் ஆதரவை பெருவேன் என கவாஜா தெரிவித்துள்ளார்.

நான் குரலற்றவர்களிற்காக பேசுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட்போட்டியின் போது அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் உஸ்மன் கவாஜா காசாமக்களிற்கு ஆதரவாக எந்த செய்தியையும்மைதானத்தில் வெளியிடக்கூடாது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எச்சரித்துள்ளது.

கவாஜா அனைத்து உயிர்களும் முக்கியம்  சுதந்திரம் என்பது மனித உரிமை போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட காலணிகளை பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

எனினும் மைதானத்தில் தனிப்பட்ட செய்திகளை வெளியிடுவதில்லை என்ற சர்வதேச விதிமுறைகளை கவாஜா பின்பற்றவேண்டும் என அவுஸ்திரேலியகிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய அணித்தலைவரும் விளையாட்டுத்துறை அமைச்சரும் உஸ்மன் கவாஜாவிற்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடும் முதலாவது முஸ்லீமான கவாஜா பேர்த்தில் இடம்பெறவுள்ள  பாக்கிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான பயிற்சிகளில் ஈடுபட்டவேளை குறிப்பிட்ட வாசகங்கள் அடங்கிய காலணியுடன் காணப்பட்டார்.

காசா பொதுமக்களிற்காக அவர் ஏற்கனவே சமூக ஊடகங்களில் குரல்கொடுத்திருந்தார்.

அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து மக்கள் கரிசனை கொள்ளவில்லையா அல்லது அவர்களின் தோலின் நிறம்தான் அவர்களை முக்கியத்துவம் அற்றவர்களாக மாற்றுகின்றதா? அல்லது அவர்கள் பின்பற்றும் மதமா? என சமூக ஊடக பதிவொன்றில் கருத்து தெரிவித்திருந்த அவர் அனைவரும் சமம் என உண்மையாகவே நாங்கள் கருதினால்  தோலின் நிறமும் மதமும் முக்கியமற்றவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை கவாஜா குறித்த தகவல் வெளியான பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள  அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  நாங்கள் எங்கள் வீரர்களிற்கு தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதற்கு உள்ள உரிமையை ஆதரவளிக்கின்றோம் ஆனால் தனிப்பட்ட செய்திகளை தடை செய்யும் ஐசிசியின் விதிமுறை உள்ளது  அதனை நாங்கள் மதிக்கின்றோம் என தெரிவித்துள்ளது.

இதேவேளை கவாஜா தனது திட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளார் என அணித்தலைவர் பட்கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

அதனை பெரிய விடயமாக்குவது அவரின் நோக்கம் இல்லை அனைத்து உயிர்களும் முக்கியமானவை என்ற வாசகங்களை அவர் தனது காலணியில் எழுதியிருந்தது  ஒரு பிரிவினை விடயமல்ல எவரும் இதற்கு எதிராக முறையிடலாம் என நான் கருதவில்லை என பட்கமின்ஸ்தெரிவித்துள்ளார்.

Previous Post

19 வயதின் கீழ் ஆசிய கிண்ணம் : பங்களாதேஷிடம் தோற்ற இலங்கை போட்டியிலிருந்து வெளியேறியது

Next Post

ராஜபக்சவினரின் எழுச்சி கண்டு அச்சம்? | மஹிந்த முக்கிய அறிவிப்பு | ரோஹித அபேகுணவர்தன

Next Post
எந்நேரத்தில் வேண்டுமானாலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் – மகிந்தானந்த

ராஜபக்சவினரின் எழுச்சி கண்டு அச்சம்? | மஹிந்த முக்கிய அறிவிப்பு | ரோஹித அபேகுணவர்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures