Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிராமசேவகர் பதவிகளுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்ப டிசம்பர் மாதம் பரீட்சை | பிரதமர் தினேஷ் சபைக்கு அறிவிப்பு

November 10, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட ஒருபோதும் இடமளியோம் | தினேஷ் குணவர்தன

நாட்டில் 2,763 கிராமசேவகர்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என பிரதமரும் பொது நிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (08) இடம்பெற்ற பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது சஞ்சீவ எதிரிமான எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் 14,022 கிராம சேவகர் காரியாலயங்கள் உள்ளன. இதில் 2,763 கிராமசேவகர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களை நிரப்பும் வகையில், 28.05.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2230 இல் உள்ள அறிவிப்பில், இலங்கைப் பரீட்சை திணைக்களம் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சையை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்களுக்காக தற்போது அரசாங்க சேவையில் உள்ளவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களம் தமது விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பரீட்சையை நடத்தவுள்ளது. இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளன. அதன்படி நேர்முகப்பரீட்சை மூலம் கிராம சேவகர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

Previous Post

தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு | வஜிர அபேவர்தன

Next Post

காசாவில் கடும் மோதல் | சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி ஹமாஸ் இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல்

Next Post
காசாவில் கடும் மோதல் | சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி ஹமாஸ் இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல்

காசாவில் கடும் மோதல் | சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி ஹமாஸ் இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures