Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாது | அமைச்சர் டக்ளஸ்

November 8, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க மீண்டுமொரு சந்தர்ப்பம் | ரணிலுக்கு டக்ளஸ் பதில் கடிதம்

கச்சதீவை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன் இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகாெண்டு எதிர்க்கட்சி உறுப்பினர் நிராேஷன் பெரேரா உரையாற்றும்போது எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நிராேஷன் பெரேரா எம். பி. குறிப்பிடுகையில்,

பிரதமர் இந்திய மீனவர்களுக்கு வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக கூறினார். அண்மையில் ஜனாதிபதி இந்தியாவுக்கு சென்ற போது கச்சதீவையும் வடக்கு கடலையும் வழங்கிவிட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பில் வடக்கு கடற்றொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கடற்படையும் அமைச்சும் மிகவும் வேகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.? இன்று மீனவர்களுக்கு வாழ்வதற்கு வழியில்லை. இன்று வரை அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.? எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை? இது தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை என்ன என்றார்.

இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பில் நானும் இணங்குகிறேன். நானும் அதில் மிகவும் தீவிரமாக இருக்கின்றேன். ஆனால் அது தொடர்பில் பிரதமரோ அல்லது வெளிவிவகார அமைச்சரோ அதனை ஏற்றுக் கொண்டு இந்தி ஊடகங்களுக்கு சொன்னதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.

அத்துடன் கச்சதீவு தொடர்பாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் தேர்தல் நடப்பதால் ஏட்டிக்கு போட்டியாக அங்கு இது தொடர்பாக கருத்துக்கள் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் கச்சதீவை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 74 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கச்சதீவு உடன்படிக்கையால் நாம் 84 வீதமான வளங்களை நாம் இந்தியாவுக்கு வழங்கியுள்ளோம்.

அத்துடன் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றேன் என்றார்.

Previous Post

ஒட்டிசுட்டானில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி

Next Post

மட்டக்களப்பில் மாணவர்கள் கைது- பேர்ள் அமைப்பு கண்டனம்

Next Post
மட்டக்களப்பில் மாணவர்கள் கைது- பேர்ள் அமைப்பு கண்டனம்

மட்டக்களப்பில் மாணவர்கள் கைது- பேர்ள் அமைப்பு கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures