அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்?

அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்?

லாஸ் ஏஞ்சல்ஸின் Azusa நகரில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது வாக்குப்பதி மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள தெருவிற்குள் திடீரென நுழைந்த பெண் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு தீவிர காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் ஆயுதம் தாங்கிய பொலிசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அருகில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் இரண்டு வாக்குப்பதிவு மையங்கள் மூடப்பட்டன.

தேர்தல் தினத்தன்று அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் என ஐஎஸ் தீவிரவாதிகள் முன்கூட்டியே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த தாக்குதல் தீவிரவாதிகளின் சதிச்செயலா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இரண்டு வெள்ளை நிற கார்களில் வந்தவர்களில் கனரக ஆயுதம் தாங்கிய பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

us01us02

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *