Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் | கைதான ஊடகவியலாளர் | மனைவி முறைப்பாடு

October 4, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மிதிகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை | கொலையாளி தலைமறைவு

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் | கைதான ஊடகவியலாளர் | மனைவி முறைப்பாடு

கடந்த செப்டெம்பர்  மாதம் 20ஆம் திகதி அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக ஊடகவியலாளரின் மனைவி செப்டம்பர் 24 ஆம் திகதி தனது கணவர் திடீரென காணாமல் போனதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

குற்றவாளியான மன்னா ரமேஷுக்கு ஊடகவியலாளர் தகவல்களைப் பகிர்வதன் மூலம் உதவியதாக பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகவும் அவர் கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு பொலிஸார் தெரிவிக்கவில்லை எனவும் அது குறித்த தகவலை ஊடகங்களுக்கு வழங்கியதாகவும் ஊடகவியலாளரின் மனைவி  முறைப்பாடு செய்துள்ளார்.

தனது கணவர் அவிசாவளை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்த அவர், அவருக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கு தனது சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் தனது கணவர் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தச் செயலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஊடகவியலாளரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post

சங்காவுக்கு கிடைத்துள்ள புதிய தலைமைத்துவம் !

Next Post

போதைப்பொருள் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட இராணுவ சீருடை, வெடிகுண்டு, தோட்டாக்கள்!

Next Post
தாலிக்கொடி அறுத்துத் திருடிய ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் வசமாக சிக்கினார்

போதைப்பொருள் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட இராணுவ சீருடை, வெடிகுண்டு, தோட்டாக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures