Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

சாதனை படைத்து வரும் ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ பட டீசர்

September 13, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
சாதனை படைத்து வரும் ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ பட டீசர்

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் மற்றும் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான எஸ். ஜே. சூர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டீசர், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த திரைப்படத்தில் ராகவா லோரன்ஸ், எஸ். ஜே. சூர்யா, நிமிஷ சஜயன், ஷைன் டாம் சாக்கோ, சத்யன், அரவிந்த் ஆகாஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேசிய விருது பெற்ற திரு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் எம். கதிரேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த டீசரை தமிழில் நடிகர் தனுஷும், தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபுவும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” 2014 ஆம் ஆண்டில் ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகம் வெளியானது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற பெயரில் வெளியாகிறது. பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் இதுவரை திரையில் இடம்பெறாத பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது” என்றார்.

Previous Post

வெல்லாலகே, அசலன்கவின் சுழற்சிகளில் இந்தியா தடுமாற்றம் | வெற்றி இலக்கை நோக்கி இலங்கை

Next Post

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் ரஷ்யத் தயாரிப்பு நீர்சுத்திகரிப்புக் கருவியொன்று மீட்பு

Next Post
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி | நீதிமன்றம் 17ஆம் திகதி உறுதிப்படுத்தும்!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் ரஷ்யத் தயாரிப்பு நீர்சுத்திகரிப்புக் கருவியொன்று மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures