Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரமிட் திட்டங்களை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | மத்திய வங்கி

September 2, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரமிட் திட்டங்களை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | மத்திய வங்கி

சட்ட விரோத பிரமிட் திட்டங்களை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

இதற்கமைய இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடியாணையின்றி கைது செய்ய முடியும் எனவும் இது பிணையில் வெளிவர முடியாத குற்றம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி, தடை செய்யப்பட்டுள்ள பிரமிட் திட்டங்களை முறையான திட்டமாக காட்டுவதற்கு பல்வேறு தந்திரங்கள் கையாளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 

அதில் மேலும் கூறியிருப்பதாவது:

முதலீடுகளை பெறுவதற்காக நான்கு அடிப்படையில் கடத்தல் பிரமிடு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் மத்திய வங்கிக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த மோசடிக்காரர்கள் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளும் பிரமிட் திட்டங்கள் சட்டபூர்வமானது என காட்டிக்கொள்வதற்காக தாம் மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப முதலீட்டாளர்களின் நிதிகளை பாதுகாப்பதாகவும் இத்திட்டத்தின் மூலம் உரிய வரிகள் அரசுக்கு செலுத்தப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இந்த திட்டங்கள் குறித்து மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்த மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் எந்தவித உண்மையும் இல்லை என பொது மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் வெளிநாட்டுச் செலாவணி திணைக்களத்தின் இணையத்தளத்திலும் மத்திய வங்கியின் உரிமம் பெற்ற மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 

எனவே, பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களைத் தவிர ஏனைய நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யக்கூடாது என்பதுடன் இந்தத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு மத்திய வங்கி மேலும் தெரிவிக்கிறது.

இத்தகைய திட்டங்களுடன் இணைவதன் மூலம் ஒருவர் தனது பணத்தை இழக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய   திட்டங்களில் ஈடுபடவோ அல்லது முதலீடு செய்யவோ வேண்டாம் என மத்திய வங்கி மேலும் அறிவுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

ரணிலுடன் ஒன்றிணையும் நிலைப்பாட்டில் மைத்திரி – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

Next Post

சகல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளையும் உடன் இடைநிறுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம்

Next Post
இளையோரை ஊக்குவிக்கும் 23 வயதின்கீழ் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

சகல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளையும் உடன் இடைநிறுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures