Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாட்டை மீட்டு எடுக்க ஐந்து ஆண்டுகள் போதும்: மைத்திரிபால சிறிசேன

July 31, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசியல் சூழ்ச்சியில் மைத்திரிபால | பொதுஜன பெரமுன கிளப்பும் சர்ச்சை

இந்த நாட்டை ஐந்து ஆண்டுகளில் மீட்டெடுக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டை மீட்டெடுப்பதற்கு நீண்ட கால அவகாசம் கோர தேவையில்லை எனவும் எனினும் இவ்வாறு நாட்டை மீட்டெடுப்பதற்கு நேர்மையான ஓர் குழு ஒன்று தேவை என தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொட பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டை மீட்க முடியும்

ஊழல், மோசடி, களவு போன்றவற்றில் ஈடுபடாத ஓர் தரப்பினரால் மட்டும் இந்த நாட்டை துரித கதியில் மீட்டெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசியலுக்கு வரும் 60 முதல் 65 வீதமானவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றுக்கு புதிதாக தெரிவாகும் பலர் தங்களுடைய நடை, உடை, பாவனை என்பவற்றையும் மாற்றிக்கொள்வதாகவும், கொழும்பிலே தங்கி விடுவதாகவும், தங்களது தொகுதிக்கு திரும்ப செல்வது இல்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல்வாதி தூய்மையானவராக இருக்க வேண்டும்

அவர்கள் கொழும்பில் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் நேரத்தை செலவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதி தூய்மையானவராக இருக்க வேண்டும் என்றும் அரசியல்வாதி தனது குடும்பத்தை பலப்படுத்தக்கூடிய ஒருவராக இருக்கக் கூடாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கையில் எரிபொருளின் விலையில் திடீர் மாற்றம்! வெளியான அறிவிப்பு

Next Post

கடந்த மே மாதம் தீவிர உணவுப் பாதுகாப்பின்மை நெருக்கடியில் 10,000 பேர்

Next Post
இலங்கையில் உணவு உண்ணும் அளவு குறைவு | உலக உணவுத்திட்டம்

கடந்த மே மாதம் தீவிர உணவுப் பாதுகாப்பின்மை நெருக்கடியில் 10,000 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures