Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொலிஸ் திணைக்களத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

July 20, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கையில் கடந்த வருடம் மே மாதம்  9  ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க பொலிஸ்  திணைக்களம் தவறியதன் காரணமாக இலங்கைப் பிரஜைகளின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து   பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள்  மனு இன்று புதன்கிழமை (19) உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.  

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளைத் தடுக்கவோ அல்லது அதற்கு எதிராக போதுமான நடவடிக்கைகளை எடுக்கவோ தவறியதன் மூலம் இலங்கை பொலிஸ் திணைக்களம் மக்களின் மனித உரிமைகளை மீறியுள்ளதாகக் கூறி ‘உயிர் உரிமை’ மனித உரிமைகள் மையத்தினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  

அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரமவினால் முன்வைக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகளை பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.துரைராஜா, யசந்த கோட்டகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

Previous Post

ஏர்போர்ட்டில் மகனுடன் சூர்யா | போட்டோ எடுக்க வந்தவர்களுக்கு போட்ட கண்டிஷன்

Next Post

பாகிஸ்தானில் மதிலொன்று இடிந்ததால் 11 பேர் பலி

Next Post
பாகிஸ்தானில் மதிலொன்று இடிந்ததால் 11 பேர் பலி

பாகிஸ்தானில் மதிலொன்று இடிந்ததால் 11 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures