Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உக்ரைனுடனான தானிய உடன்படிக்கையிலிருந்து விலகியது ரஸ்யா | பாதிக்கப்படப்போகும் நாடுகள் எவை?

July 19, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
உக்ரைனுடனான தானிய உடன்படிக்கையிலிருந்து விலகியது ரஸ்யா | பாதிக்கப்படப்போகும் நாடுகள் எவை?

கருங்கடலில் உள்ள தனது துறைமுகங்கள் ஊடாக உக்ரைன் பாதுகாப்பாக தனது தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிக்கும் சர்வதேச உடன்படிக்கையை நீடிக்கப்போவதில்லை என ரஸ்யாஅறிவித்துள்ளது.

திங்கட்கிழமையுடன் காலாவதியாகியுள்ள இந்த உடன்படிக்கை கடந்தவருடம் ரஸ்யாஉக்ரைன் மீது போர் தொடுத்ததை தொடர்ந்து சர்வதேச அளவில் உணவுப்பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரிப்பதை தடுத்தது என்ற கருத்து காணப்படுகின்றது.

உலகில் அதிகளவு விவசாய உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் பட்டியலில் ரஸ்யாவும் உக்ரைனும் உள்ளன.

கடந்த வருடம் ஐக்கியநாடுகளும் துருக்கியும் இணைந்து முன்னெடுத்த முயற்சிகளால் உடன்படிக்கை சாத்தியமானதை தொடர்நது உக்ரைன் 33 மில்லியன் மெட்ரிக்தொன் தானியங்களை ஏற்றுமதி செய்திருந்தது.

எனினும் இந்த உடன்படிக்கையை தற்போதைக்கு பின்பற்றப்போவதில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது.தனது தானிய ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.

கருங்கடல் தானிய உடன்படிக்கை என்பது என்ன?

2022 பெப்ரவரியில் உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் உலக நாடுகளில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதுடன் பணவீக்கத்தையும் அதிகரித்தது.

2021 இல் உக்ரைனும் ரஸ்யாவும் கோதுமையை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலாவதாகவும் ஐந்தாவதாகவும் காணப்பட்டன.

கடந்த வருடம் ஜூலை மாதம் உக்ரைன் கருங்கடல் ஊடாக தனது தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதில் ஐநாவும் துருக்கியும் வெற்றிகண்டன.

இந்த உடன்படிக்கை உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து கருங்கடல் ஊடாக பொஸ்பரஸ் ஜலசந்திக்கு பாதுகாப்பாக கப்பல்கள் பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது.

இத்துடன் ரஸ்யாவின் உரங்கள் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டது.

இந்த உடன்படிக்கையில் தனது ஏற்றுமதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உரிய விதத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ரஸ்யா குற்றம்சாட்டி வந்துள்ளது.

எனினும் ஒக்டோபர் 31ம் திகதி செவெஸ்டபோலில் உள்ள தனது கருங்கடல் கடல்கலங்கள் மீது ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றதாக தெரிவித்து ரஸ்யா இந்த உடன்படிக்கையிலிருந்து விலகியது.

எனினும் நவம்பர் 20 திகதி ரஸ்யாஇந்த உடன்படிக்கையில் மீண்டும் இணைந்துகொண்டது.

மார்ச் 2023 இல் மேலும் 60 நாட்கள் உடன்படிக்கையில் நீடித்திருக்க இணங்கிய ரஸ்யா மே மாதத்தில் அதனை மறுபரிசீலனை செய்தது.

எவ்வளவு தானியங்கள் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன?

இந்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது முதல் கருங்கடல் பகுதியிலிருந்து 32.9 மில்லியன் தானியங்கள் கப்பல் மூலம் சென்றுள்ளன என ஐநா மதிப்பிட்டுள்ளது.

சோளம் மற்றும் கோதுமையே பெருமளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவின் தானியக்களஞ்சியம் என உக்ரைன் குறிப்பிடப்படுகின்றது ,அதன் நிலத்தில் 55வீதத்திற்கும் அதிகமானது விவசாயத்திற்குரியது.

யுத்தத்திற்கு முன்னர் உலகில் அதிகளவு கோதுமையை உற்பத்தி செய்த நாடுகளில் 9வது இடத்திலும் சோளத்தை உற்பத்தி செய்த நாடுகளில் 8 வது இடத்திலும் உக்ரைன் காணப்பட்டது.

எந்த நாடுகளிற்கு ஏற்றுமதி இடம்பெற்றுள்ளது.

மூன்று கண்டங்களை சேர்ந்த 45 நாடுகள் இந்த உடன்படிக்கையின் கீழ் உணவுப்பொருட்களை பெற்றுள்ளதாக ஐநாதெரிவித்துள்ளது.

கருங்கடலில் இருந்து கப்பல் ஒன்று வழமையாக 32000 தொன் பொருட்களுடன் புறப்படுவது வழமை.

சீனாவிற்கே அதிக தானியங்கள் இதுவரை சென்றுள்ளன( 7.96 தொன்) ஸ்பெயின் துருக்கி இத்தாலி நெதர்லாந்து எகிப்து ஆகிய நாடுகளிற்கும் பெருமளவு தானியங்கள் சென்றுள்ளன.

Previous Post

45ஆண்டுகளுக்கு பின் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை சூழ்ந்த வெள்ளம்..!!

Next Post

ரஷ்யாவில் அரச ஊழியர்கள் ஐபோன், ஐபேட் பயன்படுத்தத் தடை

Next Post
ரஷ்யாவில் அரச ஊழியர்கள் ஐபோன், ஐபேட் பயன்படுத்தத் தடை

ரஷ்யாவில் அரச ஊழியர்கள் ஐபோன், ஐபேட் பயன்படுத்தத் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures