Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குருந்தூர் மலையில் பொங்கலுக்கு மூட்டிய தீயை சப்பாத்து காலால் அணைத்த பொலிஸ் அதிகாரி

July 15, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
குருந்தூர் மலையில் பௌத்த நிர்மாணங்களை நிர்மாணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

குருந்தூர் மலையில் இன்று பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்த நிலையிலும் கூட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் பொலிஸார், பிக்கு ஒருவர் ஆகியோர் பொங்கல் செய்யும் இடத்திற்கு வந்து நிகழ்வினை குழப்புகின்றார்கள். 

ஒருவர் இதற்கென்று விளம்பரங்கள் கொடுத்து சிங்கள மக்களை அழைத்து வந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றார் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் குருந்தூர் மலைக்கு சென்று பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட இடையூறு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அடுப்பினை கற்பூரத்தை வைத்து மூட்டுகின்ற போது பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தனது சப்பாத்து காலினால் அந்த கற்பூரத்தினை அணைத்துள்ளார். 

முன்னர் இந்த நாட்டிலே இது ஒரு மொழி பிரச்சினையாக இருந்தது, தற்போது மதப் பிரச்சினையாக மாறிக் கொண்டு வரும் நிலையை இவர்கள் உருவாக்குகின்றார்கள். இவர்கள் இதனை வேண்டுமென்றே உருவாக்குகின்றார்கள் எனத்தான் நான் நினைக்கின்றேன்.

ஏனென்றால் இந்த நாட்டில் அமைதி இருக்கக் கூடாது, இந்த நாட்டில் பௌத்த கலாச்சாரங்கள் தான் இருக்கின்றது என எனக் காட்டுவதற்காக இந்த நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனை முழுமையாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே நாங்கள் எங்களால் இயன்ற அளவுக்கு முயற்சித்து இவைகளை நிறுத்துவதற்கு முயல்வோம்.

இந்தப் பகுதிகள் முழுமையாக அவர்கள் ஆக்கிரமிக்க கூடிய நடவடிக்கைகளை தடுப்பதற்காக ஊர் மக்களுடன் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கின்றோம். ஆகவே நாங்கள் அனைவரும் முழுமையாக இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் நினைக்கின்றேன் ஒரே ஒரு சாத்வீகமான வழி தான் தற்போது இருக்கின்ற வழி. அந்த வழியிலே நாங்கள் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து இதை மீண்டும் தமிழ் சைவ மக்களுடைய ஆலயமாக மாற்ற வேண்டும் என்றார்.

Previous Post

போர் விமான என்ஜின் கூட்டுத்திட்டங்கள் குறித்து பிரான்ஸ் – இந்தியா கலந்துரையாடல்?

Next Post

மருந்துத் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு

Next Post
மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

மருந்துத் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures